Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Nadu Thowheed Jamaath - Seven Wells Branch Headline Animator

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தானும் நல்ல அமல் செய்து தான் ஒரு முஸ்லிம் என்று கூறுபவனை விட அழகிய சொல்லுக்குரியவன் யார் ?

இஸ்லாமிய குண நலன்கள்...




இஸ்லாமிய குண நலன்கள்...


1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் ?

பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.

(காண்க அல்குர்ஆன் 31:17ஃ 42:43)

சிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)

2. மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் ?

நற்செயல்களை செய்தலும், தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க அல்குர்ஆன்18:110ஃ29:4

3. இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா ?

தந்தையின் திருப்தி :

இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது.

(அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்) தப்ரானி.

தாய்க்கு நன்மை செய்வது :

இறைதூதர் அவர்களே நல்லது செய்யப்படத்தகுதியுடையவர் யார்? எனக் கேட்டேன். உனது தாய் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்யப்படத் தகுதியுடையவர் யார்? என்று கேட்டேன் உனது தாய் என்று கூறினார்கள்.(மீண்டும்) நல்லது செய்யப்பட தகுதியுடையவர் யார்? எனக்கேட்டேன். உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்ய தகுதியானவர் யார்? எனக் கேட்டேன் உனதுதந்தை அடுத்து (உன்) நெருங்கிய உறவினர்கள், அதற்கும் அடுத்து உறவினர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என தன் பாட்டனார் மூலம் தந்தை வழியாக பஹ்ஷ் இப்னுஹகிம் அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஆதாரம்) திர்மிதி, அபு தாவூத்,

மேலும் காண்க அல்குர்ஆன் 17:24ஃ 31:15)

4 . பெற்றோருக்கு கேட்கக் கூடிய பிரார்த்தனை என்ன?

ரப்பிர்ஹம்ஹூமா கமா ரப்பயானி ஸஃஈரா (பார்க்க அல்குர்ஆன் 17:24)

பொருள்: என் இறைவனே சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறே இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக

5 . பெற்றோரை திட்டாமல் இருப்பது ?

ஒருவன் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று ஆகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் (அது) எப்படி ஒருவன் (தன் பெற்றோரைத்) திட்டுவான்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். ஒருவனை இவன் திட்டுவான் அவனோ இவனது தாயையும், தந்தையையும் திட்டுவான்(இது அவனே பெற்றோரை திட்டுவதற்கு சமமாகும்) என்றுநபி (ஸல்) கூறினார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்,அபுதாவூத்,திர்மிதி)


தீய குணங்கள்



1 . தற்பெருமை

(நபியே) நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்.(ஏனெனில்) நிச்சயமாக (இப்படி நடப்பதால்) நீர் பூமியை பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சி அளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல் குர்ஆன் 17:37)

நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்)

2 . கொடுமை

அநீதி இழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதிகுறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாக பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள். (நூல்: புஹாரி)

3 . கோபம்

(பய பக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர் (கள் செய்யும் தவறு) களை மன்னிப்பார்கள். (அல் குர்ஆன் 3:134)

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். கோபம் கொள்ளாதே! என்றார்கள். பலமுறை கேட்ட போதும், கோபம் கொள்ளாதே! என்றார்கள்.

(அறிவிப்பவர்: அபு ஹூரைரா (ரலி) நூல்: புஹாரி)

4 . பிறர் துன்பத்தை கண்டு மகிழல்

உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே! இறைவன் அவன் மீது கருணை புரிந்து, உன்னை துன்பத்தில் ஆழ்த்திவிடுவான். (நூல்: திர்மிதி).

5. பொய்

எவன் பொய்யனாகவும், நிராகரிப்பவனாகவும் இருக்கிறானோ அவனை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவதில்லை (அல் குர்ஆன்:39:3)

சந்தேகமானதை விட்டுவிட்டு உறுதியான விசயத்தை நீ எடுத்துக்கொள் (ஏனெனில் ) உண்மை மன நிம்மதி தரக்கூடியது. பொய் சந்தேகமானது என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் ஹஸன் (ரலி) நூல்கள்:அஹமத், நஸயீ, திர்மிதி, இப்னு ஹிப்பான்)

6. கெட்டவற்றை பேசுதல்

எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பவனும் சபிப்பவனும், ஆபாசமாகவும் அற்பமாகவும் பேசுபவனும் இறைநம்பிக்கையாளன் அல்லன். (நூல்:முஸ்லிம்)

7. இரட்டை வேடம் போடுதல்

மறுமை நாளில் மனிதர்களில் கெட்டவர்களாக இரண்டுமுகம் உடைய (இரட்டை வேடதாரிகளை) பார்ப்பீர்கள். ஒருமுகத்துடன் (ஒரு கூட்டத்திடம்) செல்வார்கள். வேறுமுகத்துடன் ( இன்னொரு நேரத்தில் அக்கூட்டத் திடம்) செல்வார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அதாவது தனதுகொள்கையை சந்தர்ப்பத்திற்கு தகுந் தவாறு மாற்றிக் கொள்வார்கள்) (அறிவிப்பவர்:அபுஹூரைரா (ரலி)நூல்கள்:புஹாரி, முஸ்லிம்)

8. பாரபட்சம் காட்டுதல்

நபி (ஸல்) கூறினார்கள் (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (நூல்:அபுதாவூத்)

முஃமின்களே நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது(உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள் (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையாக சாட்சி கூறுங்கள்) (அல் குர்ஆன்:4:135)

9. வரம்பை மீறிய புகழ்ச்சி –

நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: அதிகம் புகழக் கூடியவர்களை நீங்கள் கண்டால் அவர்கள் முகத்தில் மண்ணை வாரிப் போடுங்கள் (அறிவிப்பாளர்:மிக்தாத் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்ஃ மிஷ்காத்)

10. பரிகாசம்

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம் . ஏனெனில் (பரிகசிக்கப் படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம் (அவ்வாறே) எந்தப்பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம்செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம் இன்னும் உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும்(உங்களில்) ஒருவரைடியாருவர் (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள் . ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய)பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும் எவர்கள்(இவற்றிலிருந்து மீழவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரராவார்கள். (அல் குர்ஆன் 49:11)

11. வாக்குறுதி மீறல்

வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக வாக்குறுதி (பற்றி) மறுமையில் விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:34)

நயவஞ்சகனின் அடையளங்கள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான், வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரிஃ முஸ்லிம்)

12. சண்டை

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் . இதனை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்:புஹாரி)

13. குறை கூறல்

குறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அல் குர்ஆன் 104:1)

இறை நம்பிக்கையாளர்களே! உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் யாராவது ஒருவர்தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தை புசிக்கவிரும்புவாரா, (இல்லை!) அதை நீங்கள் வெறுப்பீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீளுவதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன் மிக்க கருணையாளன். (அல் குர்ஆன் 49:12)

14. பொறாமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறாமையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகை விழுங்கி விடுவதுபோல் பொறாமை நன்மைகளை விழுங்கிவிடுகின்றது. (அறிவிப்பவர்: அபுஹூரைரா (ரலி), நூல்:அபுதாவூது, மிஷ்காத்)

15. கெட்ட பார்வை

(நபியே) ஈமான் கொண்டவர்கள் தங்கள் பார்வையை (தவறானவைகளிலிருந்து) தாழ்த்திக் கொள்ள வேண்டுமென்று கூறுவீராக. (அல் குர்ஆன் 24:30)

கண்கள் செய்யும் சைகைகளையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல் குர்ஆன்40:19)

செவி, பார்வை, மனம் இவை ஒவ்வான்றும் மறுமைநாளில் (அதனதன் செயல் பற்றி) நிச்சயமாக விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:36)



நற் குணங்கள்


1. நிதானம்

இன்னும் இவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள் (உலோபித் தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள். எனினும் இரண்டிற்கும் மத்திய நிலையில் இருப்பார்கள். (அல் குர்ஆன் 25:67)

உன் நடையில் மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல் நடுத்தரத்தை மேற்கொள் (அல் குர்ஆன் 31:19)

2. எளிமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கேட்கவில்லையா, 'எளிமை என்பது ஈமானின் (இறைநம்பிக்கையின்) அடையாளமாகும் திண்ணமாக எளிமை என்பது ஈமானின் அடையாளமாகும்.' (அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்கள்:அபுதாவூத், மிஷ்காத்.

நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது கூறினார்கள் : முஆதே! சொகுசு வாழ்க்கையைத் தவிர்த்துக் கொள் ஏனெனில் அல்லாஹ்வின் அடியார்கள் சொகுசு வாழ்க்கை வாழ்பவர் அல்லர் (அறிவிப்பவர்: முஆது இப்னு ஜபல் (ரலி) நூல்:முஸ்னத் அஹ்மத் மிஷ்காத்)

3. தூய்மை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை ஈமானின் -இறை நம்பிக்கையின் பாதி அங்கமாகும் (அறிவிப்பாளர்: அபு மாலிக் அல் அஷ் அரி (ரலி) நூல்: முஸ்லிம்)

(நபியே!) உனது ஆடைகளை தூய்மையாக வைத்துக்கொள்வீராக! (அல்குர்ஆன் 74:4)

4. மக்களுக்கு ஸலாம் சொல்லுதல்

மனிதர்களில் அல்லாஹ்விடம் உயர்வானவர்கள் ஸலாத்தினைக் கொண்டு ஆரம்பிப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்: அபுதாவூது, திர்மிதி, அஹ்மத்

உனக்கு அறிமுகமானவரோ அறிமுகமில்லாதவரோ எவராயினும் நீ ஸலாம் கூறிக்கொள். இது இஸ்லாத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும் என பெருமானார் கூறினார்கள். (நூல்: புஹாரி)

5. நாவடக்கம்

இரு தாடைகளுக் கிடையிலும் (நாவையும்) இருதொடைகளுக்கு இடையிலுள்ளதையும் (வெட்கத்தலத்தையும்) பாதுகாத்துக் கொள்வதாக ஒருவன் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்கிறேன். (நூல்:புஹாரி)

எவர் இறைவனையும், மறுமையையும் ஏற்றுக்கொள்கிறாரோ அவர் நல்லவற்றைக் கூறவும் அல்லது மௌனமாக இருக்கவும். (நூல்: திர்மிதி)

6. அன்பாக பேசுதல்

கனிவான இனிய சொற்களும் மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினை தொடரும்படி செய்யும் ஸதக்காவை(தர்மத்தை) விட மேலானவையாகும். தவிர அல்லாஹ்(எவரிடத்திலும் எவ்விதத்) தேவையும் இல்லாதவன் மிக்க பொறுமையாளன். (அல் குர்ஆன் 2:263)

7. பிறருக்கு உதவி புரிதல்

நபி (ஸல்) அவர்களிடம் எதையும் கேட்டு அவர்கள் இல்லையென்று சொன்னது கிடையாது என ஜாபில் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளருக்கு கட்டிடத்தைப் போன்றவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு உறுதுணையாக இருக்கிறது பிறகு நபி (ஸல்)அவர்கள் உதாரணத்திற்கு தங்களுடைய கை விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள். (அறிவிப்பாளர் : அபு மூஸா அஷ்அரி (ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம், மிஷ்காத்)

8. உண்மை பேசுதல்

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் ! உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (அல் குர்ஆன் 9:119)

விளையாட்டுக்கேனும் பொய்யை விட்டுவிடுபவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன். (நூல்: அபுதாவூத்)

9. நன்றி செலுத்துதல்

மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார். (நூல்: அஹ்மத், திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு நோற்காத ஆனால் நன்றி செலுத்தக் கூடிய ஒரு மனிதன் பொறுமையை மேற்கொண்டு நோன்பு நோற்பவனைப் போன்றவன் ஆவான். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா (ரலி) நூல்: திர்மிதிஃ மிஷ்காத்)

10. வெட்கப்படுதல்

திண்ணமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு பண்பு உண்டு. இஸ்லாத்தின் பண்பு நாணமுறுவதேயாகும் . (நூல்: இப்னு மாஜா)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது பூமியோடு நெருக்கமாகும் வரையில் தமதுஆடையை மேலே உயர்த்தமாட்டார்கள்.(அறிவிப்பவர்:அனஸ் (ரலி) நூல்: புஹாரி, முஸ்லிம்)

11. தவக்கல் (அல்லாஹ்வை சார்ந்திருத்தல்)

அல்லாஹ்வின் மீது தவக்கல் என்னும் முழுப்பொறுப்புச்சாட்டும் முறையில் நீங்கள் முழுமையாக நீங்கள் பொறுப்பு சாட்டினால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கும் உணவளிப்பான். புறவை காலையில் வயிறு ஒட்டியதாகச் செல்கிறது. மாலையில் வயிறு நிரம்பித் திரும்புகிறது. (அறிவிப்பாளர்: உமர் (ரலி) நூல்: திர்மிதி)

12. தவ்பா (மன்னிப்பு கோருதல்)

எவர் பாவமன்னிப்புக் கோரி, மேலும் நம்பிக்கைக் கொண்டு நற்செயலும் புரிய தொடங்கிவிடுகிறாரோ அத்தகையோரின் தீமைகளை இறைவன் நன்மையாக மாற்றிவிடுவான். (அல் குர்ஆன் 25:70)

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக நான், ஒருநாளில் எழுபது முறையைவிட மிக அதிகமாக அல்லாஹ்விடம் பாவம் பொறுத்தருள தேடி, அவனின்பால் பாவமீட்சிப் பெறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி

13. உயிரினங்கள் மீது அன்பு செலுத்துதல் மற்றும் இரக்கம் கொள்ளுதல்

நபி (ஸல் ) அவர்கள் விலங்குகளின் முகத்தில் அடிப்பதைபும், முதுகில் சூடு இடுவதையும் தடுத்தார்கள்.(நூல்: திர்மிதி)

தவறான நடத்தையுடைய பெண் ஒரு நாயைக் கண்டாள். அந்த நாய் தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு ஒருகிணற்றைச் சுற்றி வந்து கொண்டே இருந்தது. உடனே அவள் தனது காலுறைகளை ஒரு துணியில் கட்டி, கிணற்றில்விட்டு தண்ணீர் எடுத்து, அந்த நாய்க்கு புகட்டினாள். இதன்காரணமாக இறைவன் அவளை மன்னித்தான். நூல்: புஹாரி,
நிச்சயமாக! அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்... ஞானமுள்ளவன் .



Read More...

சேலத்தில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு ! தீர்மானங்கள், புதிய நிர்வாகிகள்....!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் இன்று (30-1-11) காலை 10.30 மணிக்கு மேலாண்மைக்குழுத் தலைவர் சம்சுல் லுஹா அவர்கள் தலைமையில்சேலத்தில் பரபரப்புடன் துவங்கியது.

இதில் வரும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு என்ற முக்கிய அம்சங்கள் இடம் பெற்றது.

முதலாவதாக மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மத் அல்தாஃபி அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

புதிய மாநில நிர்வாகிகள்

தலைவர் பி.ஜே
பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ்
பொருளாளர் அன்வர் பாஷா
து. தலைவர் அப்துர் ரஹீம்
து. பொதுச் செயலாளர் சைய்யத் இப்ராஹீம்

மாநிலச் செயலாளர்கள்
அப்துல் ஹமீது
சாதிக்
அப்துல் ஜப்பார்
யூசுப் (திருவள்ளூர்)
அஷ்ரஃப்தீன் பிர்தௌசி
மாலிக் (ராம்நாடு)
சாதிக் ( கோபிசெட்டிபாளையம்)

பொதுக்குழு தீர்மானம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

2011 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி சேலம் நேரு கலை அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 11 வது மாநிலப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழகம்

1. கண்காணிப்புக்குழு

முஸ்லிம்களின் கடுமையான போராட்டங்களுக்குப் பின் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை திமுக அரசு சட்டமாக்கியது. ஆனால் இட ஒதுக்கீடு அமுலுக்கு வந்தது முதல் இன்று வரை வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டி அடிப்படையில் 3.5 கிடைக்கவே இல்லை. ஒவ்வொரு வேலைக்கும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் விளம்பரம் செய்யப்படும் போது அந்த விளம்பரத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 ஒதுக்காமல் ஒரு சதவிகிதம் அளவுக்கு ஒதுக்கி பகிரங்கமாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதைத் திரட்டி முதல்வரிடம் நாம் கொடுத்து உடனே இவற்றை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த உடன் அந்தக் குளறுபடிகளைச் சரி செய்வதாக அரசு மூலம் எழுத்து மூலமான உத்தரவாதம் தந்தனர். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின் இரண்டு தடவை துணை முதல்வரைச் சந்தித்து இக்கோரிக்கையை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.ஆனாலும் எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமல் இருக்க கண்காணிப்பு ஆணைத்தை நேற்று (29.01.11) அமைத்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. கண்காணிப்பு ஆணையம் எதிர்காலத்தில் செய்யப்படும் நியமனங்களை மட்டும் கண்காணிக்காமல் இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட காலம் முதல் இது வரை செய்யப்பட்டுள்ள நியமனங்களையும் ஆய்வு செய்யவேண்டும் என்று இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.

3.5 சதவிகிதம் என்பது போதுமானதல்ல. முஸ்லிம்களின் எண்ணிக்கை அவர்களின் கல்வி பொருளாதார நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இட ஒதுக்கீட்டை சற்று அதிகப்படுத்தி தருமாறு கோரியதையும் திமுக அரசு அலட்சியம் செய்வதை இந்தப் பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

2. தமிழக அரசின் சமத்துவப் பொங்கல் தமிழக அரசு ஜனவரி 15 ஐ தமிழ் புத்தாண்டாகக் கடந்த 8.2.2008 அன்று அறிவித்து ஆணை பிறப்பித்தது. பொங்கலைக் கொண்டாடுபவர்கள் அந்நாளில் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் வணக்க வழிபாடு செய்வர். பொங்கல் அன்று இது போன்ற வழிபாடு நடத்துவது ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களின் நடைமுறை. விருப்பம் உள்ளவர்கள் அதைச் செய்கின்றனர். ஆனால் ஜனவரி 15 ஆம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்ததோடு நின்று விடாமல் அனைத்து சமுதாய மக்களையும் அன்றைய தினத்தில் வீடுகளில் விளக்கேற்றுமாறும் வழிபாடு நடத்துமாறும் வலியுறுத்தும் விதமாக தமிழ அரசின் அறிவிப்புகள் அமைந்துள்ளன.

அது மட்டுமில்லாமல் அரசு அலுவகங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் அனைவரும் சமத்துவப் பொங்கல் கொண்டாடுமாறு கட்டளை பிறப்பித்து முஸ்லிம்கள் மீதும் இன்னொரு மதத்தின் நம்பிக்கை தினிக்கப்பட்டுள்ளது. பொங்கலையொட்டி தமிழக அரசுபொங்கல் பரிசு என்ற பெயரில் அரிசி, வெல்லம் போன்ற பொருட்களை வழங்குகிறது. அவ்வாறு வழங்கும் பையில் சூரியனை வணங்குவது போன்ற ஒரு படத்தை இடம் பெறச் செய்துள்ளது. இது பற்றி சட்டசபையில் நேற்று அமைச்சர் வேலு கூறுகையில் இது எங்கள் சின்னம் அல்ல, பொங்கல் அன்று சூரியனை வணங்குவதை குறிக்கும் சின்னம் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அரசே இது போன்ற செயலை செய்யுமாறு நேரடியாக வலியுறுத்துகின்றது.

அரசு அலுவலகங்களிலும் அன்றைய தினத்தில் வழிபாடு நடத்தப்படுகின்றது.

மத சார்பற்ற ஜனநாயக அரசு, இது போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது. ஏனெனில் இவ்வாறு கால்நடைகளுக்கும் சூரியனுக்கும் வணக்க வழிபாடு செய்வது முஸ்லிம்களின் அடிப்படைக் கொள்கையான படைத்த இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதற்கு எதிரானதாகும். முஸ்லிம்கள் இது போன்ற வழிபாடுகளில் ஈடுபட வலியுறுத்தும் தமிழக அரசின் செயல் முற்றிலும் ஜனநாயகத்திற்கும் மத சார்பற்ற தன்மைக்கும் எதிரானதாகும்.

தமிழக அரசின் ஜனநாயகத்திற்கும் மத சார்பற்ற தன்மைக்கும் எதிரான இந்த நடவடிக்கையை வண்மையாகக் கண்டிக்கின்றோம் என்பதையும், அரசு இது போன்று செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாடறிந்த மூதறிஞருக்கு முஸ்லிம்கள் சூரியனையோ கால்நடைகளையோ வழிபட மாட்டார்கள் என்ற சாதாரண உண்மை கூட எப்படி தெரியாமல் போனது. இஸ்லாம் மதத்துக்கு எதிரான செயலை முஸ்லிம்களும் செய்ய வேண்டும் என்று உத்தரவு இடுவதை சென்ற வருடமும் நாம் கண்டித்து முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். அதன் பிறகும் முதல்வர் இவ்வாறு அறிவிப்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீண்டும் ஒரு முறை கண்டிக்கிறது.

3. நடிகர்களுக்கு நிலம்

பாதைகளின் ஓரம் சாரத்தில், கூவத்தின் நாற்றத்தில் குடிசை கட்டிக் கொண்டு மழையிலும் வெயிலிலும் வாடுகின்ற சேரி மக்களைக் கொண்டது தான் தமிழகம். இந்தத் தமிழகத்தில் வன்முறை, ஆபாசம், விபச்சாரம், விரசம் போன்ற தீமைகளின் தொழிற்சாலைகளாகத் திகழ்கின்ற திரைப்படத் துறையினருக்கு, கூத்தாடிகளுக்கு 90 ஏக்கர் நிலத்தைத் தாரை வார்த்துக் கொடுத்து, அதில் வீடு கட்டிக் கொடுக்கும் தமிழக முதலமைச்சரை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அந்நிலத்தைத் திரும்பப் பெற்று வீடில்லாத மக்களுக்கு வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

4. பாபர் பள்ளிபோன்று தொடரும் அக்கிரமம்

பள்ளிவாசல் விஷயத்தில் முஸ்லிம்களில் இரு ஜமாஅத்தார்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டவுடன் காவல்துறையும் வருவாய்த் துறையும் யோர்த்துக் கொண்டு பாபர் மஸ்ஜித்தைப் போன்று இழுத்து மூடுகின்ற அக்கிரமத்தை செய்து வருகின்றன. நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி எஸ்.பி. பட்டணம் பள்ளிவாசலில் இந்த அநியாயத்தை காவல்துறையும் வருவாய்துறையும் நடத்தியது.
இந்த அக்கிரமத்தையும் அராஜகத்தையும் தமிழ அரசு உடனே தடுத்து நிறுத்தும் படி இப்பொதுக்குழுக் கேட்டுக் கொள்கின்றது.

புதுவை அரசு

1. புதுவை மாநில அரசுக்கு கோரிக்கை

புதுவை மாநிலத்தில் அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 6.1 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதாக புதுவை சட்டமன்றத்தில் புதுவை காங்கிரஸ் அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தைச் சட்டமாக்குவோம் என்றும் ஆந்திராவைப் போன்று புதுவையில் வட்டியில்லா கடன் வழங்குவோம் என்றும் புதுவை காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. ஆனால் 2 சதவிகித இட ஒதுக்கீடு மட்டும் அளித்து முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளது. அது மட்டுமின்றி ஒட்டு மொத்த புதுவை மாநிலத்தில் இட ஒதுக்கீடு அளிக்காமல் பதுவை காரைக்கால் பகுதியில் மட்டும் தான் இந்த இட ஒதுக்கீடு என்று தகவல்கள் வருகின்றன. அதன்படி பார்த்தால் புதுவை காரைக்காலில் இரண்டு சதம் என்றால் ஒட்டு மொத்த புதுவையில் ஒரு சதவிகிதம் தான் ஆகிறது. ஒரு சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி முஸ்லிம்களை வஞ்சிக்கும் காங்கிரசின் இந்த துரோகத்தை இந்த பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது

மேலும் வட்டி இல்லா கடன் வழங்குவதாக எழுத்து மூலம் அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றாமல் புதுவை காங்கிரஸ் அரசு ஏமாற்றி வருவதை இப்பொதுக்குழு கண்டிக்கிறது.

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முன்வந்துள்ளதாக மேற்குவங்க அரசு அறிவித்தது. முஸ்லிம் சமுதாயம் இதை வரவேற்று தனது நன்றிகளையும் தெரிவித்தது. ஆனால் அது அறிவிப்போடு நிற்கிறது. அதற்கான எந்த முயற்சியும் செய்வதாக தெரியவில்லை. எனவே கொடுத்த வாக்கை நிறைவேற்றுமாறும் அம்மாநிலத்தில் 25 சதவீதம் முஸ்லிம்கள் வாழ்வதைக் கருத்தில் கொண்டு அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்குமாறு அம்மாநில அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

மத்திய அரசு, மாநில அரசு

1. சீர் கெட்டு வரும் சட்டம் ஒழுங்கு

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் கொலை கொள்ளை கற்பழிப்பு கூலிப்படை அட்டகாசம் அதிகரித்தவன்னம் உள்ளண. கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தில் குழந்தைகள், சிறுமிகள், பெண்கள் கடத்தல் அதிகரித்து வருகிறதெனவும், 2007ம் ஆண்டு 1097 பேரும், 2008ல் 1155 பேரும், கடந்த ஆண்டு 1133 பேரும் கடத்தப்பட்டுள்ளனர் என தமிழக காவல்துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

சட்டங்களும் தண்டனைகளும் சமூக விரோதிகளுக்கு பயத்தை ஏற்படுத்தி குற்றங்கள் செய்வதிலிருந்து விலகிப்போக வைக்க வேண்டும். ஆனால் எத்தகைய பயமுமின்றி பிஞ்சுக் குழந்தைகளைக் கொலை செய்தல், கற்பழித்தல் என சமூக விரோதிகள் தொடர்ந்து செயல்படுவது, தற்போதைய சட்டத்தின் அடிப்படையில் வழங்கும் தண்டனை கடத்தல்காரர்களுக்கு சிறிதளவு கூட பயத்தை ஏற்படுத்தவில்லை என்பதை படம் பிடித்து காட்டுகிறது. ஆகையால் இத்தகைய குற்றங்களுக்கு வழங்கும் தண்டனையை இன்னும் கடுமையாக்க வேண்டும். அரபு நாடுகளை போன்று சட்டத்தை கடுமையாக்கினால் தான் குற்றங்கள் குறைந்து பொது மக்கள் நிம்மதியாக வாழ முடியும். மக்கள் தம் குழந்தைகளை எவ்வித அச்சமுமின்றி பள்ளிக்கூடங்களுக்கும் அனுப்ப முடியும். கற்பழிப்பு, கொலை போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கினால் மட்டுமே சமூக விரோதிகளிடத்தில் பயத்தை ஏற்படுத்த முடியும். ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கற்பழிப்பிற்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று கருத்தை வெளியிட்டிருக்கிறது. எனவே சட்டத்தை இயற்ற வேண்டிய இடத்தினில் இருக்கின்ற மத்திய அரசு இந்த விசயத்தில் உடனடியாகத் தலையிட்டு இத்தகைய குற்றங்களுக்கு மரண தண்டனை என்று சட்டமியற்ற வேண்டும். பொது மக்களின் நலன் என்ற அடிப்படையில் மாநில அரசு இதை வலியுறுத்த வேண்டும்.

2. விலைவாசி உயர்வு

அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயருவதற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு அடிப்படைக் காரணமாக உள்ளது. இந்த விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அநியாய வரிகளே காரணமாக உள்ளன. விவசாயி பாட்டாளி மற்றும் பொதுமக்களை மிகப்பெரும் அளவில் இது பாதிப்பதால் மத்திய அரசு உடனே பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெறுவதுடன் பிற நாடுகளைப் போன்று நமது நாட்டிலும் பெட்ரோல் டீசலுக்கு வரி விதிப்பதைக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

3. ஆன்லைன் வியாபாரம்

பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும் போது விலைகள் குறைவதும், உற்பத்தி குறையும் போது விலைகள் அதிகரிப்பதும் இயற்கையாக நடக்கும் நிக்ழ்வு தான். இதற்கு அரசாங்கம் பொறுப்பாகாது என்பது உண்மை என்றாலும் தற்போது விலைவாசி வின்னை முட்டும் அளவுக்கு ஏறியிருப்பதற்கும் மத்திய அரசின் கொள்கை தான் காரணமாகும்.

பொருளைப் பார்க்காமலே உலகில் எங்கோ இருந்து கொண்டு ஆன்லைன் வியாபாரம் மூலம் எல்லாப் பொருள்களையும் முடக்கி வைத்து செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர். மத்திய அரசின் அனுமதியும் இதற்கு இருக்கிறது. ஒரு சில பணமுதலைகள் அனைத்துப் பொருள்களையும் ஆன்லைனில் பேரம் பேசி முடக்கி விட்டு தாறுமாறாக விலையை ஏற்றி விற்பனை செய்வதால் தான் தங்கம் முதல் தானியம் வரை விலைவாசி உயர்கிறது. ப.சிதம்பரமும் பிரதமர் மன்மோகன் சிங்கும் பணமுதலைகளுக்கு ஆதரவான ஆன்லைன் சூதாட்ட வணிகத்துக்கு உடந்தையாக இருப்பது தான் விலைவாசி உயர்வுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. எந்தப் பொருளையும் ஆன்லைன் மூலம் வீற்பதும் வாங்குவதும் முற்றாக தடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. பணக்காரர்களுக்கு ஆதரவான கொள்கை காரணமாக விலைவாசி ஏறுவதற்குக் காரணமான மத்திய அரசை இப்பொதுக்குழு கண்டிக்கிறது

மேலும் பெட்ரோல் விலை ஏற்றம் என்பது இன்னும் பல பொருள்களின் விலை ஏற்றத்துக்கு வழி வகுக்கும் என்பது தெரிந்திருந்தும் மாதத்துக்கு இரண்டு தடவை பெட்ரோல் விலையை உயர்த்தும் மத்திய அரசைக் கண்டிக்கிறோம். 100 ரூபாய் பெட்ரோலுக்கு எழுபது ரூபாய் வரி போட்டு ஒரு பக்கம் மத்திய அரசு கொள்ளை அடிக்கிறது. இன்னொரு பக்கம் நட்டம் எனக் கூறி நாடகமாடி மக்களை ஏமாற்றுகிறது. எழுபது ரூபாய் வரி போடா விட்டால் பாகிஸ்தானில் கொடுப்பது போல் 25 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்க முடியும். எனவே பெட்ரோலியப் பொருள் மீது எல்லா வரிகளையும் ரத்து செய்து 25 ரூபாய்க்கு பெட்ரோல் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

மக்களை வெள்ளைக் காரனை விட அதிகம் சுரண்டி பெட்ரோல் விலை உயர்வு மூலம் அனைத்து பொருள்கள் விலையும் ஏறுவதற்குக் காரணமான மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழக அரசின் அனைத்து இலவசத் திட்டங்களிலும் முஸ்லிம்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றனர். இலவச இரண்டு ஏக்கர், இலவச வீடுகள், சமத்துவபுரம் வீடுகள், இலவச வீட்டு மனப்பட்டாக்கள், வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஒதுக்கப்படும் வீடுகள், இலவச எரிவாயு இணைப்பு உள்ளிட்ட அனைத்திலும் கந்துடைப்புக்காக ஓரிரு முஸ்லிம்களின் புகைப்படம் வெளியிடப்படுகிறது. முஸ்லிம்களின் சதவிகிதத்துக்கும் அவர்களது வறுமை நிலைக்கும் ஏற்ப இவை வழங்கப்படவில்லை என்று இந்தப் பொதுக்குழு குற்றம் சாட்டுகிறது.

அனைத்து நலத்திட்டங்களிலும் முஸ்லிம்களுக்குக் கிடைத்தது எவ்வளவு என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தேர்தல் நிலைபாடு

1. மனித நேய மக்கள் கட்சி எங்கு நின்று போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக அவர்களின் சமுதாய துரோகங்களை அடையாளம் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கி அவர்களை தோல்வியை தழுவச் செய்யும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
இவர்கள் சமுதாயத் தொண்டு செய்யாமல் ஜமாஅத் நிர்வாகிகளையும் தலைவர்களையும் மிரட்டுதல் பள்ளிவாசல் நிர்வாகத்தில் நுழைந்து நிர்வாகத்தை சீரழிப்பது, கட்டப் பஞ்சாயத்து செய்வது, அப்பாவிகளின் நிலத்தை அபகரிப்பது, குடும்பப் பஞ்சாயத்து என்ற பெயரில் அராஜகம் செய்வது ஆகிய காரியங்க்ளைச் செய்து முஸ்லிம் சமுதாயத்தின் வெறுப்பைச் சம்பாதித்துள்ளனர். இவர்கள் வளர்வது சமுதாயத்துக்கு கேடாக முடியும் என்பதால் இவர்கள் எந்த அணியில் இருந்தாலும் இவர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்வது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

யாருக்கு ஆதரவு ?

2. தேர்தல் கூட்டணிகளும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் இன்னும் வெளிவராத காரணத்தாலும் தேர்தல் நடத்தை விதி இன்னும் நடைமுறைக்கு வராததால் ஆளும் கட்சி முஸ்லிம்களுக்கு செய்ய வேண்டிய நன்மைகளை கடைசி நேரத்திலாவது செய்ய வாய்ப்பு இருக்கின்ற காரணத்தாலும் நிலைமை தெளிவானவுடன் மாநில செயற்குழுவைக்கூட்டி யாருக்கு ஆதாரவு என்ற முடிவை எடுக்க செயற்குழுவுக்கு அதிகாரம் வழங்குவது என்று இப்பொதுக்குழு ஏகமனதாக தீர்மானிக்கிறது.

மத்திய அரசு

1- பாபர் மஸ்ஜித்

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியன்று அலகாபாத் நீதிமன்றம் 60 ஆண்டுகாலமாக நிலுவையில் இருந்த பாபர் மஸ்ஜித் தொடர்பான தனது தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தை மீள முடியாத அதிர்ச்சியிலும், ஆத்திரத்திலும் ஆழ்த்தியிருக்கின்றது. அது இந்திய நாட்டின் அரசியல் சட்ட வரம்புகளைத் தாண்டி, இந்தியாவின் மதச்சார்பின்மைக் கொள்கைக்கு முரணாக அளிக்கப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களின் வாழ்வுரிமையான வழிபாட்டு உரிமையைப் பறித்துள்ளது. இந்தத் தீர்ப்பு சட்டத்திற்குப் புறம்பானது.

பாபர் மசூதி இருந்த இந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இப்படி முடிவு எடுக்க எந்தச் சட்டவிதியும் உரிமையியல் சட்டத்தில் இல்லை. அப்பட்டமாக சட்டம் மீறப்பட்டுள்ளது.

அப்படியே ஒருவர் குறிப்பிட்ட இடத்தில் பிறந்திருந்தால் அதற்காக அவர் அந்த இடத்தின் உரிமையாளராவார் என்று இந்தியாவிலும் உலகில் எந்த ஒரு நாட்டிலும் சட்டம் இல்லை. எனவே இவர்களின் தீர்ப்பு சட்ட விரோதமானது.

குறிப்பிட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க அந்த இடத்தில் இதற்கு முன் என்ன இருந்தது என்று தோண்டிப் பார்க்க வேண்டும் என்று இந்தியாவிலோ வேறு எந்த நாட்டிலோ சட்டம் இல்லை. இதையும் அந்த நீதிபதிகள் மீறியுள்ளனர்
தோண்டப்பட்ட இடத்தில் கிடக்கும் பொருளைக் கொண்டு இன்னார் இந்த மாதிரியான கட்டடத்தை இடித்தார் என்று கண்டு பிடிக்கலாம் என்று இந்திய உரிமையியல் சட்டத்தில் சட்ட விதி ஏதும் இல்லை. இதையும் நீதிபதிகள் மீறியுள்ளனர்.

குறிப்பிட்ட இடத்தில் ராமருக்குக் கோவில் இருந்தது என்று கூறுவது நீதிமன்றத்தின் வேலையல்ல. அந்த வேலையை நீதிபதிகள் செய்துள்ளனர்.
அந்த இடத்தில் இருந்த ராமர் கோவிலை பாபர் இடித்தார் என்று கற்பணையாக முடிவு செய்யும் அதிகாரம் நீதிபதிகளுக்கு இல்லை
ஆவணம் யார் பெயரில் இருந்தது என்பதைப் பார்ப்பது தான் நீதிமன்றத்தின் வேலை. ஆனால் எடுத்துக் காட்டப்பட்ட ஆதாரங்களை அவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

யாருடைய அனுபவத்தில் இருந்து வருகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. 1528 முதல் 450 வருடம் முஸ்லிம்களின் அனுபவத்தில் தான் பாபர் மஸ்ஜித் இருந்து வந்தது என்பது உலகம் அறிந்த உண்மை. ஆனால் இந்த உண்மையையும் நீதிபதிகள் கண்டு கொள்ளவில்லை.
ஒரு இடம் குறித்து தீர்ப்பு அளிப்பதற்கு ஸ்டேட்டஸ் கோ – அதாவது இப்போது எப்படி இருக்கிறதோ அப்படி நீடிப்பது – என்ற நிலை வழக்குத் தொடுத்த நேரத்தில் உள்ள நிலையைத் தான் குறிக்கும். வழக்குத் தொடுத்த 1949 ல் அது முஸ்லிம்களிடம் தான் இருந்தது. அதை அலட்சியம் செய்து விட்டு இப்போது அது பள்ளிவாசலாக இல்லை என்று கூறியிருப்பது அப்பட்டமான மோசடியாகும்.

1992 வரை அது பள்ளிவாசலாக இருந்தது என்பதும் அது திட்டமிட்டு இடிக்கப்பட்டது என்பதும் உலகறிய நடந்ததாகும். ஆனால் இப்போது பள்ளிவாசல் அங்கே இல்லை என்பதால் அது இந்துக்களுக்குச் சொந்தம் எனக் கூறியிருப்பது அப்பட்டமான சட்ட மீறலாகும். பள்ளிவாசல் இடிக்கப்படாமல் இருந்தால் இவர்கள் என்ன தீர்ப்பு சொல்வார்கள்? இடிக்கச் சொல்லி உத்தரவு போடுவார்களா?

இப்படி அடுக்கடுக்கான சட்ட மீறல் செய்து சிறுபாண்மை மக்களுக்கு வரலாற்றில் இது வரை நடந்திராத மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
எனவே சட்ட விரோதமான இத்தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகளையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த வழக்கை நாட்டின் உயர் அதிகாரம் படைத்த உச்ச நீதிமன்றம் மறுவிசாரணைக்கு உட்படுத்தி சட்டப்படி தீர்ப்பு அளிக்க ஆவண செய்யுமாறு இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

பாபரி மஸ்ஜித் தீர்ப்பு குறித்து யாருக்கும் அஞ்சாமல் நியாயமான கருத்து தெரிவித்த முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரையும் இந்த அநீதியைக் கண்டித்து குரல் எழுப்பிய நியாயவான்கள், சட்ட வல்லுனர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்ட அனைவரையும் இந்தப் பொதுக்குழு வெகுவாகப் பாராட்டுகின்றது.

அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியான மாத்திரத்தில் இதை வரவேற்ற திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், மற்றும் போலி சமுதாய இயக்கங்களை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்ற அத்வானி போன்றோர் மீது நடவடிக்கை எடுப்பதில் மென்மையான அணுகுமுறையைக் கையாண்டு வரும் மத்திய காங்கிரஸ் அரசை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. நீதிமன்றங்களின் மீது இருந்த நம்பிக்கையை இந்தத் தீர்ப்புக்குப் பின் முஸ்லிம்கள் இழந்து விட்டனர். எனவே பாபர் மஸ்ஜிதைப் பூட்டியதற்கும் அதை வழிபாட்டுக்கு திறந்து விட்டதற்கும் பள்ளிவாசல் இடிக்கப்படும் போது தடுக்கத் தவறியதற்கும் பொறுப்பான காங்கிரஸ் கட்சி தனது துரோகச் செயலுக்கு பரிகாரம் தேடும் வகையில் நாடு சுதந்திரம் அடையும் போது யாரிடம் எந்த வழிபாட்டுத்தலம் இருந்ததோ அது அவர்களுக்கே சொந்தம் என்ற சட்ட வரம்புக்குள் பாபர் மஸ்ஜிதையும் கொண்டு வர வேண்டும். அதன் மூலம் எல்லா வழக்குகளையும் செயலிழக்கச் செய்து பள்ளிவாசல் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய காங்கிரஸ் அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

பாபரி மஸ்ஜித் பாணியில் இனி வேறொரு மஸ்ஜிதில் கை வைப்பதற்கு யார் முயற்சி செய்தாலும் அதே பாணியில் முஸ்லிம்கள் தங்கள் உயிரையும் அர்ப்பணித்து பள்ளிவாசலைக் காக்க வேண்டும் என்று முஸ்லிம் சமுதாயத்தை இந்தப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

2. நாடு முழுவதும் தனி இட ஒதுக்கீடு

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் கமிஷன் முஸ்லிம்களுக்கு மத்திய அரசுப் பணிகளிலும் அனைத்து மாநிலங்களிலும் பத்து சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்களித்து முஸ்லிம்களின் ஓட்டுக்களை அறுவடை செய்த காங்கிரஸ் நீதிபதி மிஸ்ரா அவர்களின் பரிந்துரை அளிக்கப்பட்ட பின்பும் ஆழ்ந்த உறக்கத்தில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் உறக்கத்தைக் கலைப்பதற்காக 2010 ஜூலை 4 அன்று பதினைந்து லட்சம் முஸ்லிம்கள் திரண்டு நீதிபதி மிஸ்ரா அவர்களின் பரிந்துரயை செயல்படுத்துமாறு கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து பிரதமரையும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அவர்களையும் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் நேரில் சந்தித்து இக்கொரிக்கையை வலியுறுத்தி விளக்கிக் கூறி மனுவாகவும் அளித்தனர். இட ஒதுக்கீடு தருவோம் என்று சொன்ன அவர்கள் இதற்காக ஒரு துரும்பையும் எடுத்துப் போட்டதாகத் தெரியவில்லை. மத்திய அரசின் இந்த அலட்சியப் போக்கை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் உடனே முஸ்லிம்களுக்கு பத்து சதவிகித இட ஒதுக்கீட்டை இந்தியா முழுவதும் சட்டமாக்க இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகின்றது.

3. கல்வி உதவித் தொகை

சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவி, கல்விக் கடன் ஆகியவை சென்ற ஆண்டு அதிகாரிகளின் ஆணவப் போக்காலும் கல்வி நிலையங்களின் அலட்சியப் போக்காலும் பெரும்பாலான முஸ்லிம்களுக்குக் கிடைக்கவில்லை. அது போல் நடக்காமல் இருக்க தெளிவான வழிகாட்டுதலை வழங்கி அலைக்கழிக்காமல் முஸ்லிம் சமுதாயம் பயன் பெற தெளிவான வழிகாட்டுதலை அறிவிக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

4. பயங்கரவாதத்தை பாரபட்சமின்றி தடை செய்க

இந்திய நாட்டின் அமைதிக்கும், இந்திய அரசியல் சட்டத்திற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக தொடர்ந்து இருந்து வருகின்ற இயக்கங்களின் பட்டியலில் முதலிடம் பெறுபவை ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் உள்ளிட்ட சங்பரிவார் இயக்கங்கள் தான். மாவோயிஸ்ட்டுகளின் தீவிரவாதத்திற்கு சற்றும் குறையாத இத்தகைய இந்துத்துவா தீவிரவாத இயக்கங்கள் தான் நம் நாட்டில் நிகழ்ந்த பல குண்டுவெடிப்புகளுக்கு மூளையாகச் செயல்பட்டவை என்பதை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழுநேர ஊழியராக பணியாற்றும் சுவாமி அசீமானந்தா நீதிபதியிடம் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் தெளிவுபடுத்துகிறது. ஆனால் பயங்கரவாதச் செயல்களில் துளியும் சம்பந்தப்படாத அப்பாவி முஸ்லிம்களைக் குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டனர் என்று காவி மயமாகிப் போய்விட்ட காவல்துறையும் புலனாய்வு துறையும் கைகோர்த்துக் கொண்டு அவர்களைக் கைது செய்து அப்பாவிகளின் வாழ்க்கையை சிதைத்து விட்டனர். எனவே அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை அளித்து, அவர்கள் குற்றமற்றவர்கள் என்று ஊடகங்களின் வழியாக பகிரங்கமாக அறிவித்து அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட மாநில அரசுகளயும் மத்திய அரசையும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது

இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ஹனீப் என்பவர் ஆஸ்திரேலிய அரசால் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். பின்னர் அவர் அப்பாவி என்பதை அறிந்து கொண்ட ஆஸ்திரேலிய அரசு அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டதுடன. பால கோடி ரூபாய் நட்ட ஈட்டையும் வழங்கியுள்ளது. அந்நிய நாட்டுக்காரருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ஆஸ்திரேலிய நாடு நீதி வழங்கும் போது சொந்த நாட்டு மக்களை பொய் வழக்கில் கைது செய்த மத்திய மாநில அரசுகள் அதற்கு மன்னிப்பு கேட்காததுடன் நட்ட ஈடும் வழங்காமல் இருப்பது நாட்டுக்கு அவமானம் என்று இப்பொதுக் குழு சுட்டி காட்டுகிறது. நாட்டில் நிகழ்ந்த அனைத்து குண்டுவெடிப்புகளையும் முழுமையாக திறந்த மனதுடன் விசாரிக்கும் வண்ணம் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை மத்திய அரசு உடனே ஏற்படுத்த வேண்டும். அந்த குழுவில் காவி சிந்தனையுடைய அதிகாரிகள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மத்திய அரசின் கடமை. மகாராஸ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்கரே படுகொலையையும் இந்துத்துவாவினர் தான் செய்திருப்பார்கள் என்பதை திக் விஜய் சிங் வெளியிட்ட தொலைபேசி உரையாடல் நிரூபிக்கிறது. ஆகவே இந்தப் படுகொலையையும் மீண்டும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உண்மைக் குற்றவாளிகளைக் கண்டு பிடித்து தண்டிக்க வேண்டும். உண்மையை வெளிக்கொணர வேண்டுமென்ற உன்னத நோக்கத்துடன் இந்த விசாரணையை மத்திய அரசு அமைத்துக் கொள்ள வேண்டுமென்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.

5. பள்ளிவாசலை இடித்த காங்கிரஸ்

தில்லியில் ஹஸ்ரத் நிஜாமுதீன் இரயில் நிலையம் அருகிலுள்ள ஜானக்புரி பி பிளாக்கில் உள்ள நூர் மஸ்ஜித் என்ற முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலம் ஒன்றை அரசு நிலத்தில் இருப்பதாகப் பொய்யான காரணமொன்றைக் கூறி கடந்த 12 ஆம் தேதி தில்லி மாநில காங்கிரஸ் அரசு இடித்து தரை மட்டமாக்கி இருக்கிறது. இந்தப் பள்ளிவாசல் புறம்போக்கு நிலத்திலில்லை. மாறாக வக்ப் வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் தான் இருக்கிறது என்பதற்கான ஆவணங்களை வக்ப் வாரியம் சமர்ப்பித்த பிறகும் கூட தில்லி மாநில காங்கிரஸ் அரசு மத துவேசத்துடன் நூர் பள்ளிவாசலை இடித்திருக்கிறது. முஸ்லிம்களின் பரவலான எதிர்ப்பால் கலவரமடைந்த தில்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் மீண்டும் பள்ளிவாசல் கட்டித்தரப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதே போன்றதொரு அறிவிப்பைத் தான் பாபர் மஸ்ஜித் இடித்த சமயத்தில் அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்ம ராவ் பாராளுமன்றத்தில் அறிவித்தார். ஆனால் இன்று வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலங்களான பள்ளிவாசல்களை இடிப்பதில் காங்கிரஸ்காரர்களும் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை இந்தப் பள்ளிவாசல் இடிப்பு உறுதிப்படுத்துகிறது. ஏற்கெனவே 2009 ஆம் ஆண்டு திபியாவாலி என்று அழைக்கப்படும் புராதனச் சின்னமாகத் திகழ்ந்த பள்ளிவாசல் ஒன்றை இடித்தது. இப்போது மறுபடியும் இன்னொரு பள்ளிவாசலை இடித்து பாஜகவுக்கு சமமாக காங்கிரசிலும் காவிச் சிந்தனை பரவியிருக்கிறதென்பதை நிரூபித்திருக்கிறார்கள். ஏற்கெனவே பாபர் மஸ்ஜித் இடிப்பினாலும், அதன் பின்னர் வெளியான பாபர் மஸ்ஜித் தொடர்பான அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பினாலும் காங்கிரசின் மேல் கடுமையான அதிருப்தியில் இருக்கின்ற இந்திய முஸ்லிம்களை இந்த பள்ளிவாசல் இடிப்பு இன்னும் அக்கட்சியின் மேலுள்ள வெறுப்பை அதிகமாக்கியிருக்கிறது. இந்த வெறுப்பு வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் உட்பட பல மாநிலத் தேர்தல்களில் எதிரொலித்து காங்கிரசின் ஆட்சிக்கட்டில் கனவை நிராசையாக்கி விடுவதற்கான வாய்ப்புகளை அதிகமாக்கியிருக்கின்றன. இதற்குப் பிறகும் காங்கிரஸ் தொடர்ந்து முஸ்லிம்களைச் சீண்டிக் கொண்டிருந்தால் அக்கட்சியை மழையில் கரையும் மணல் கோட்டையைப் போன்று கரைத்து, மத்திய ஆட்சிக் கட்டிலிலிருந்தும் காங்கிரசை அகற்றி விடுவார்களென்பதை காங்கிரஸ் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அரசு நிலத்தில், நடைபாதையில் இருக்கிற வழிப்பாட்டுதலங்களை அகற்ற முடியாத காங்கிரஸ் அரசு காவி உணர்வுடன் முஸ்லிம்களின் சொந்த நிலத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல்களைக் குறிவைத்து இடித்ததை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.

6. சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காக மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ஆதாரம் உரியோருக்கு வழங்கப்படாமல் அப்படியே திரும்ப அனுப்பப்படுகின்றது. முஸ்லிம்கள் இந்த நிதி கோரி விண்ணப்பிக்கும் போது அந்த நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றே சம்பந்தப்பட்டத் துறையினர் பதிலளிக்கின்றனர். இந்த அநீதியை உடனே தடுத்து நிறுத்தி உரியவருக்கு நிதி கிடைக்க ஆவண செய்யுமாறு மத்திய அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

7. வக்ஃபு சொத்துகள்

முஸ்லிம் சமுதாயத்தின் தனவந்தர்கள் அறப்பணிகளுக்காக அர்ப்பணித்துச் சென்ற சொத்துக்கள் வக்பு வாரியத்தின் துணையுடன் தான் சுருட்டப்பட்டுள்ளன. எனவே கிறித்தவ சமுதாயம் எப்படி தனது அறப்பணிகளுக்கான சொத்துக்களை அரசின் தலையீடு இல்லாமல் தானே நிர்வகித்துக் கொள்கிறதோ அது போல் முஸ்லிம்களின் வக்பு சொத்தை அந்தந்த பகுதி முஸ்லிம்களே நிர்வாகம் செய்யும் வகையில் வக்பு போர்டை முற்றாகக் கலைத்து விட வேண்டும். சில தனியார்கள் வர்த்தக நோக்கத்தில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு உதவும் வகையில் வக்பு வாரிய லட்டர் பேடில் வாரியத் தலைவர் நிதி உதவி கேட்டு செல்வந்தர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். வக்பு வாரியத்தின் சார்பில் இக்கல்லூரி நடத்தப்படுகிறது என்று பொய்யான தகவலை அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார். வக்பு வாரியத்தின் பெயரை தனி நபர்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தும் வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மான் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

இராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் எதிரிகளாக அறியப்படும் தமுமுகவினர் நடத்திய போராட்டத்தில் பேருந்துகள் சேதமாக்கப்பட்டதற்கு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மீது வழக்குப் போட்டு கைது செய்ய முயற்சிக்கும் தமிழக அரசின் பழிவாங்கும் போக்கை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

மத்திய அரசு

8. தொல்லியல் ஆய்வு கழகம்

1948ல் டெக்கானில் தவ்லதாபாத் கோட்டையிலுள்ள ஜும்ஆ மஸ்ஜிதை தொல் பொருள் ஆய்வுக் கழகம் கோயிலாக மாற்றியது. 2003ல் மத்திய பிரதேசம் தார் என்ற ஊரில் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கமால் மவ்லா பள்ளிவாசலை இந்துக்கள் வணங்கும் கோயிலாக மாற்றியது.
16ஆம் நூற்றாண்டில் ஷேர்ஷா ஆட்சியில் சூரியில் கட்டப்பட்ட புராண கிலாவுக்குக் கீழ் இந்துக்களின் இந்திர பிராஸா நகரம் இருப்பதாக தொல்பொருள் ஆய்வுக் கழகம் கதை கட்டியது.

இப்படி முஸ்லிம்களின் கோட்டை, கொத்தளங்கள், பள்ளிவாசல்கள், நினைவுச் சின்னங்களுக்கு உள்ளே கோயில் இருப்பதகாகக் கதை கட்டுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டு தொல்பொருள் ஆய்வுக் கழகம் செயல்பட்டு வருகின்றது. பாபரி மஸ்ஜித் பள்ளி விஷயத்தில் அதைக் கோயிலாக மாற்றுவதற்கு இந்தக் கழகம் தான் முழு வேலையையும் செய்து வருகின்றது.

இப்படி மத துவேஷத்தைத் தூண்டி, வகுப்புக் கலவரத்திற்கு வித்திடுகின்ற இந்தத் தொல் பொருள் ஆய்வுக் கழகத்தை மத்திய அரசு உடனே கலைக்கவேண்டும்; அதன் கைவசம் உள்ள 118 பள்ளிவாசல்களை உடனே முஸ்லிம்களிடம் மீட்டித் தர வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

உலகம்

1. துனிஷியா,எகிப்து புரட்சி

துனிஷியாவிலும் எகிப்திலும் ஆட்சியாளர்களுக்கு எதிரான புரட்சி வெடித்திருக்கின்றது. இதுவரை இஸ்லாமிய நாடுகளில் இல்லாத தற்கொலை முயற்சிகள் அண்மையில் துனிஷியாவில் தொடங்கி தற்போது அவை எகிப்து, அல்ஜீரியா நாடுகளிலும் பரவிக் கொண்டிருக்கின்றது.
இஸ்லாமிய நாடான எகிப்தின் ஆட்சி ஃபிர்அவ்னிடமிருந்து மீட்கப்பட்டு மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்நிய சக்திகளிடமிருந்து மீட்கப்பட்டு முஹம்மது (ஸல்) அவர்களின் சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சமுதாயங்களிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது அடிப்டைக் காரணம் அவர்களிடமிருந்த ஏகத்துவக் கொள்கை தான்.

இந்த ஏகத்துவத்தை மறந்ததால் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள துனிஷியாவில் இதுவரை 23 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய ஜைனுல் ஆபிதீன் என்பவர் நாட்டை விட்டுத் துரத்தி அடிக்கப்பட்டு விட்டார்.

அதுபோல் ஏகத்துவக் கொள்கைக்குப் பரிசாக வழங்கப்பட்ட எகிப்தையும் ஃபிர்அவ்னை விடக் கேடாக ஆட்சி செய்கின்ற அதிபர் ஹோஸ்னி முபாரக், கலவரத்தை அடக்குவதற்காக முஸ்லிம்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும், கைது செய்து சிறையிலடைத்தும் கொண்டிருக்கின்றார். இந்தக் கொடுமைகளை நிறுத்தி உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ஹோஸ்னி முபாரக்கைக் கேட்டுக் கொள்வதுடன் இந்தப் புரட்சி தங்கள் நாடுகளிலும் தொற்றிக் கொண்டு விடுமோ என்று பயப்படுகின்ற இஸ்லாமிய நாடுகள், இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, தாங்கள் நாடுகளில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான ஆட்சியை அமைத்துக் கொள்ளும்படி இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது. 2. பலஸ்தீன ஆக்கரமிப்பு

பலஸ்தீன ஆக்கிரமித்து அந்நாட்டின் மக்களை அகதிகளாக்கி அவர்களையும் அன்றாடம் அழித்து தனது ஆக்கிரப்பை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேலை வன்மையாக கண்டிப்பத்துடன் அந்நாட்டுடன் தனது உறவை இந்தியா உடனே துண்டித்துக்க வேண்டும் என்று மத்திய அரசை இப்பொழுக் குழு கேட்டுக் கொள்கின்றது.

Read More...

கொந்தளித்த மக்கள் கடலில் சென்னை , மதுரை ...

பாபர் மசூதி வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய அநியாய தீர்ப்பை கண்டித்தும் , கருப்புகோட்டில் கருங்காலிகளாக இருந்து நாட்டின் நீதித்துறையை கேவலப்படுத்தும் அலஹாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளை கண்டிக்கும் விதமாகாகவும் இதை விட முக்கியமாக உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தானாக எடுத்து மறு விசாரணைக்கு உட்படுத்தி சட்டப்படி(சட்ட புத்தகத்தில் உள்ளபடி) நீதி வழங்கவும் சென்னை மற்றும் மதுரையில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெறும் என தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அறிவித்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் கொந்தளிப்பை தங்களது மனதுக்கும் பூட்டி வைத்திருந்த மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக தமிழகத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் ஆண்கள் , பெண்கள் , முதியவர்கள் மற்றும் குழந்தைகளும் வீரத்தளபதிகளாக சென்னை மற்றும் மதுரை நோக்கி அணி திரண்டனர். கட்டுக்கடங்காத மக்கள் கொந்தளிப்பால் சென்னை மற்றும் மதுரை நகரமே ஸ்தம்பித்தது. சென்னையில் சென்ட்ரல் மெமோரியல் ஹால் இல் இருந்து உயர்நீதிமன்றம் வரை பேரணி புறப்படும் என அறிவிப்பு செய்யப்படிருந்தது. ஆனால் அல்லாஹ்வின் பேரளுளால் மக்கள் வெள்ளமே சென்னையின் முக்கிய சாலைகளை முடக்கி பேரணி நடக்க முடியாத அளவுக்கு மாற்றியது.

தொடர்ந்து சென்னையில் P . ஜைனுல் ஆபிதீன் அவர்களும் மதுரையில் அல்தாபி அவர்களும் அலஹாபாத் உயர்நீதிமன்றம் மற்றும் அநியாய தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர். மேலும் இந்த வழக்கை தானாக எடுத்து நியாய தீர்ப்பு வழங்குமாறும் உச்ச நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

பத்ரு போர்க்களத்தை சந்தித்த சமுதாயத்தை ஏமாற்ற நினைத்தால் எங்கள் பள்ளிகளை காப்பாற்ற எத்தகைய போர்க்களங்களையும் சந்திக்க தயங்க மாட்டோம் என்பதை இந்த அரசுக்கு உணர்த்தியது.

ஆக்கம்,
k . ஹசன் பஷீர்




-சமுதாய பணி தொடர இறைவினிடம் ப்ரார்த்திப்பிராக !
Read More...

குடும்ப சீரழிவுக்கான காரணங்கள்



-சமுதாய பணி தொடர இறைவினிடம் ப்ரார்த்திப்பிராக !
Read More...

வினாடி வினா

வினா :
நபிகள் நாயகம் மரணிக்கும் போது ஒருவரிடம் சில ரகசியங்களை கூறினார்கள்.அது யார்? என்ன ரகசியம்?
பதில்:
ஃபாத்திமா (ரலி)1.என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்துவிட்ட(தைக் குறிப்ப)தாகவே அதை கருதுகிறேன். என் வீட்டாரில் என்னை முதலில் வந்தடையப் போவது நீ தான்'' என்று கூறினார்கள்.2.இறைநம்பிக்கையான சொர்க்கவாசி பெண்களின் தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?ஆதாரம்:
புகாரி 3624 முஸ்லிம் 4486 திர்மிதி 3807 இப்னு மாஜா 1610 அஹ்மத் 2334324.09.2009. 05:472  வினா ;
மூன்று தன்மை இருந்தால் நாம் இறைநம்பிக்கையின் முழுச்சுவையை சுவைத்துவிட்டோம்! அது என்ன?
பதில்:
1.அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு, மற்ற அனைத்தையும் விட அதிகம் நேசத்திற்குரியவர்களாகுவது.2.அவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.3.நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது.
ஆதாரம்:புகாரி -16 முஸ்லிம் -60 திர்மிதீ -2548 நஸாயி -4901 இப்னு மாஜா -4023 -
வினா
 :ஆதம் (அலை) அவர்களது உயரம் எவ்வளவு?
பதில்
:60 முழம் (60 அடி)ஆதாரம்:புகாரி 3326 முஸ்லிம் -5075



கேள்வி:
அல்லாவிற்கு மிகவும் பிடித்த வார்த்தைகள் சொல்வதற்கு இலகுவான சிறிய வார்த்தைகள் அதிகம் நன்மையை பெற்றுத் தரும் வார்த்தைகள் அவை எத்தனை? என்ன?

பதில்
:இரண்டு வார்த்தைகள்1. சுப்ஹானல்லாஹில் அலீம்.2. சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி.ஆதாரம்:புகாரி-6406 முஸ்லிம்-4860 திர்மிதீ-3389 இப்னு மாஜா-3796 அஹ்மத்-6870
கேள்வி:
நபிகள் நாயகத்தின் பெயர் திருக்குர்ஆனில் எத்தனை இடங்களில் இடம் பெற்றுள்ளது?
பதில்:
ஐந்து இடங்கள்ஆதாரம்:முஹம்மது என்பது 4 இடங்களில்: 3-144 33-40 47-2 48-29.அஹ்மத் என்பது 1 இடத்தில்: 61-6.
கேள்வி:
அபுபக்கர் அவர்களது ஆட்சிகாலத்தில் முதன் முதலில் திருக்குர்ஆனை தொகுத்த இளைஞர் யார்?

பதில்:
சைத் இப்னு சாபித் (ரலி)

ஆதாரம்:
புகாரி-7191 திர்மிதி-3028 அஹ்மத்-20657

 கேள்வி:
இப்ராஹீம் (அலை) அவர்கள் தோற்றத்தில் யாரைப் போன்று இருப்பார்கள்?
பதில்:
முஹம்மது (ஸல்) அவர்கள்.ஆதாரம்:புகாரி-3355 முஸ்லிம்-244 திர்மிதீ-௩௫௮௨

கேள்வி
:நபிகள் நாயகத்தின் உம்மத்தில் விசாரணையின்றி சுவர்க்கம் செல்பவர்கள் எத்தனை பேர்? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

பதில்:
70 ஆயிரம் பேர்கள். 1.அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள். 2.அவர்கள் சகுனம் பார்க்கமாட்டார்கள். 3.அவர்கள் (நோய்க்காக) சுடிட்டுக் கொள்ளமாட்டார்கள்.4.அவர்கள் தனது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

ஆதாரம்:புகாரி-5705 முஸ்லிம்-323 திர்மிதீ-2370 அஹ்மத்-2321  
 கேள்வி
 :கிப்லா மாற்றத்திற்கு பிறகு நபிகள் நாயகம் தொழுத முதல் தொழுகை என்ன?
பதில்:
அசர் தொழுகை.ஆதாரம்:புகாரி-41 முஸ்லிம்-818 திர்மிதீ-312 நஸாயி-485 இப்னுமாஜா-1000 அஹ்மத்-17765

கேள்வி:
நபிகள் நாயகம் இரண்டு சஹாபிக்கு பட்டாடை அணிவதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். யாருக்கு? ஏன்?
பதில்;
1.அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி). 2.சுபைர் (ரலி)சிரங்கு நோயின் காரணமாக.

ஆதாரம்:நூல் புகாரி-2919 முஸ்லிம்-3869
கேள்வி:
மக்காவில் இருந்து மதினாவிற்கு முதன் முதலில் நபிகள் நாயகம் வரும் போது மக்கள் யாரை தவறுதலாக இவர் தான் அல்லாஹ்வின் தூதர் என்று நினைத்தனர்?
பதில்
:அபுபக்கர் (ரலி). ஆதாரம்:புகாரி-3906 அபுதாவுத்-3561 அஹ்மத்-16930



Read More...

எழுதி படிக்கும் குழந்தை சிறந்த மாணவனாக வளரும்

லண்டன், ஜன.25:


நார்வே நாட்டின் ஸ்தவஞ்சர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஆன்னி மான்ஜென் மற்றும் பிரான்சின் மார்செல்லி பல்கலைக்கழக நரம்பியல் நிபுணர் ஜீன் லக் வேலே இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். இதற்காக இரு குழுக்களாக குழந்தைகள் பயன்படுத்தப்பட்டனர். புதிய வார்த்தைகள் கொடுக்கப்பட்டன. ஒரு குழு கையால் எழுதி படிக்கவும், மற்றொரு குழு கம்ப்யூட்டரில் டைப் செய்து படிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.

ஒரு வார கால ஆய்வுக்கு பின், கையால் எழுதி படித்த மாணவர்கள் சிறந்த ஞாபக சக்தியுடன் வார்த்தைகளை நினைவு கூர்ந்தனர். ஆனால், கம்ப்யூட்டரில் டைப் செய்தவர்களால் வார்த்தைகளை ஞாபகத்திற்கு கொண்டு வர முடியவில்லை.

எழுதும் போது மூளையின் உணரும் பகுதியில் எழுத்துக்களின் உருவம் படிந்து விடுகிறது. ஆனால், டைப் செய்யும் போது அவ்வாறு படிவதில்லை. டைப் செய்வது படிப்பதற்கு வலு சேர்ப்பதில்லை.

இதேபோல், உடல் அசைவுகளுடன் கூடிய பேச்சுகள், விளக்கங்கள் எளிதில் மூளையில் படிந்து விடுகின்றன. உடல் அசைவுகள் இல்லாத பேச்சுகள், விளக்கங்கள் எளிதில் மூளையில் படிவதில்லை. மற்றொருவர் உடல் அசைவுகளுடன் பேசும் போது எளிதில் விஷயங்கள் மனதில் பதியும். அதையே நாம் நம் உடல் அசைவுகளுடன் செய்யும் போது பதிவதில்லை போன்றவை ஆய்வில் தெரிய வந்துள்ளன.

நன்றி : தினகரன் செய்தித்தாள்
Read More...

அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்ற மாணவரணியின் நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது

இதில் மாணவ மாணவிகள் திரளாக கலந்து பயன் பெற்றனர் , மேலும் தங்கள் சந்தேங்கங்களையும் நிவர்த்தி பெற்று சென்றனர்.
இந்நிகழ்ச்சியில்  சிறப்புரை ஆற்றிய " ஷபி B.E  " மிக சிறப்பாக மாணவர்கள் தேர்வுகள் காலங்களில் என்ன என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்ய கூடாது போன்ற ஆலோசனைகளை கூறினார், நிகழ்ச்சி ஏற்பாட்டை கிளை மாணவரணி இறைவனின் அருளால் நன்றாக செய்தனர்


Read More...

பெட்ரோல் விலை ஏற்றம் உண்மை நிலை என்ன? -ஆய்வு கட்டுரை


பெட்ரோல் விலை : பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்
 
- கட்டுரை ஆசிரியர் :   S.M.அப்பாஸ்.M.I.Sc
 
  மோட்டார் வாகனம் பயன்படுத்வோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை பரிகொடுத்தவர்கள் போன்று புலம்புவது "அடப்பாவிங்களா கேக்குரதுக்கு ஆள் இல்லன்னு பெட்ரொல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்கிட்டே போரானுங்களே" என்று தான்.

இதில் நாமும் விதிவிலக்கல்ல..

ஏனெனில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பெட்ரோல் விலை 2.55 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 63.45 ரூபாய்க்கு தமிழகத்தில் பெட்ரோல் விற்கப்படுகின்றது.

பிரதமர் உட்பட உயர் மட்ட அளவில் கூட்டம் போடும் அளவிற்கு நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ள இந்த நிலையில், நமது இந்திய அரசு இதை (எண்னை நிறுவனங்கள் அரசின் ஒப்புதலுடன் தான் விலையை ஏற்றுகின்றது) செய்திருப்பது, "நாட்டு மக்கள் செத்தாலும் பரவாயில்லை தங்களுக்கு கோடிகோடியாய் பணம் தரும் பெரும் தொழிலதிபர்கள் நல்லா இருக்கனும் உலகின் பணக்கார பட்டியலில் அவர்கள் பெயர் முன்னேர வேண்டும்" என்ற அரசியல் வாதிகளின் நயவஞ்சகத்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

நாம் இதை ஆதாரத்தோடே கூறுகின்றோம்!

விலையை உயர்த்து சொல்லப்படும் காரணங்கள்

1.ஆயில் நிறுவனங்களுக்கு நஷ்டம்

அடிக்கடி விலையை உயர்த்துவதற்கு அரசு சொல்லும் முதல் காரணம் ஆயில் நிறுவனங்களுக்கு ஒருநாளைக்கு "இத்தன கோடி நஷ்டம்" என்பது தான்.

இது கடைந்தெடுத்த பொய்யாகும்! இது பச்சைப் பொய்யாகும்!!  இது மகாப் பொய்யாகும்!!

நாம் இதை  இவ்வளவு அழுத்தமாக சொல்லக் காரணம், அரசு எந்த நிறுவனங்களை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றதோ அந்த எண்னை நிறுவனங்களின் (IOC -Indian Oil Corparation , HPCL -Hindustan Petroleum Corporation , BPCL-Bharat Petroleum Corporation) 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையை நாம் படித்தது தான்.

நிதி நிலை அறிக்கை (நான்கு மாதத்தில் மட்டும் கிடைத்த லாபம்)

IOC யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 5294 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 832.27 கோடி
5294 + 832.27 = 6126.27 கோடி லாபம்

HPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 90.90 கோடி
2142.22 + 90.90 = 2233.12 கோடி லாபம்

BPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 198.00 கோடி
2142.22 + 198.00 = 2340.22 கோடி லாபம்

மேற்குறிப்பிட்ட மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் மட்டும் நான்கு மாதத்தில் கிட்டதட்ட 10699.61 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து விட்டு, எண்ணை 'நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவே விலையை உயர்த்தி உள்ளோம்' என்று அப்பட்டமாக பொய் கூறி பொதுமக்களை மத்திய அரசு ஏமாற்றுகின்றது.

நஷ்டம் என்று அரசு கூறுவது 'வர வேண்டிய லாபத்தை என்று' சில பொருளாதார வல்லுணர்கள் விளக்கம் கொடுக்கின்றனர்.

அதாவது உதாரணத்திற்கு: 2000 கோடி லாபம் வர வேண்டும் ஆனால் 1500 கோடி தான் லாபம் வந்துள்ளது எனவே 500 கோடி இலாபம் குறைந்துள்ளது என்று ஒருவர் கூறுவது போன்று.

லாபத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதற்கும் "விலையை கூட்டும் அளவிற்கு இத்தன கோடி நஷ்டம் " என்பதற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கின்றது.

பொதுமக்கள் சோத்துக்கே வழியில்லாமல் இருக்கும் போது கோடிக்கணக்கில் எண்னை நிறுவனம் மூலம் லாபம் சம்பாத்தித்து விட்டு 'அதுவும் போதவில்லை இன்னும் விலையை ஏற்று' என்று மத்திய அரசு கூறுவது, அரசு எந்த அளவிற்கு  பொதுமக்களின் பணத்தை கொள்கை அடிக்க வழிகளை தேடுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது.

நான்கு மாதத்தில் மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் 10 ஆயிரம் கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிவிட்டு, பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நஷ்டக் கணக்கு காட்டி, பெட்ரோல் விலையை கூட்டவது நியாயமான அரசு செய்யும் வேலையா?

எனவே அரசுக்கு எண்னை நிறுவனங்கள் மூலம் இதுவரையிலும் எந்த நஷ்டமும் இல்லை மாறாக கொடிக்கணக்கில் லாபம் தான், மத்திய அரசு அப்பட்டமாக பொய் கூறுகின்றது என்பதை பொதுமக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

நஷ்ட கணக்கு நாடகத்தை பொதுமக்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள்.

2. குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது

அடுத்து சொல்லும் காரணம் குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது. இதுவும் பொய்யாகும்.

தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்றது. தற்போது பெட்ரொலின் விலை லிட்டர் 63.54 ரூபாய்.

ஆனால் இதே பீப்பாய் 2008 ஆம் ஆண்டில் கிட்டதட்ட 135 டாலருக்கும் மேல் விற்கப்பட்டது. அப்போது விலை என்ன தெரியுமா ? பெட்ரொல் லிட்டர் ரூபாய் 54 மட்டும் தான்.

2008 ஐ ஒப்பிடும் போது தற்போது பீப்பாய் விலை 34 சதவிகிதம் குறைந்துள்ளது. எனவே பெட்ரோல் விலையையும் 34 சதவிகிதம் குறைக்க வேண்டும். அது தான் நியாயம் அதாவது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூ ஆக ஆக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு குறைப்பதற்கு பதிலாக தற்போது 55 சதவிகிதம் விலைய உயர்த்தி 63 ரூபாய்க்கு விற்கின்றது.

இது மிகப்பெரும் அநியாயமாகும்.

2008 ல் பீப்பாய் ஒன்று 135 டாலருக்கும் மேல் சர்வதேச சந்தையில் விற்கும் போதே  பெட்ரோலை லிட்டர்  54 ரூபாய் தான். ஆனால் தற்போது பீப்பாய் ஒன்று 92 டாலர் தான் விற்கின்றது எனவே பீப்பாய் விலையை கவனத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு விலைய குறைக்க வேண்டுமே தவிர கூட்டக் கூடாது.

எனவே பெட்ரோல் விலை உயர்வுக்கு குரூட் ஆயிலின் விலை உயர்வு தான் காரணம் என்று கூறுவது பொய் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

விலை உயர்ந்துள்ளதற்கு உண்மையான காரணம்

உண்மையில்  தற்போது உள்ள சந்தை நிலவரப்படி கணக்கு பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் கூட வராது.

ஆம், நாம் பெட்ரோலுக்கு கொடுக்கும் பணத்தில் பாதிக்கு மேல் உள்ள தொகை மத்திய மாநில அரசு விதித்துள்ள வரிகள் தான்.

இதோ தற்போதைய பெட்ரோலுக்கான வரி நிலவரம் 2011

Customs duty 7.5 %                :  4.75        
Import duty  5 %                     : 3.17
Tamilnadu GOVT. Tax 30%  : 19.035
Excise Duty                            : 14.45
Actual petrol price:                 : 22.07

Total Price                               : 63.45

வரி என்ற பெயரில் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்

22 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோலை 41 ரூபாய் கூடுதலாக வரிமேல் வரி விதித்து 63.45 க்கு அநியாயமாக விற்கும் மத்திய மாநில அரசுகள் இன்னும் என்ன காரணம் சொல்லி விலையை உயர்த்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றது. பொய்கணக்கு கூறி பொதுமக்களிடம் நாடகமாடிக்கோண்டிருக்கின்றது.

ஒரு வருடத்திற்கு நாம் அரசிற்கு செலுத்தும் பெட்ரோல் வரி .. ஒரு சிறிய கணக்கு..

மோட்டார் வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்லும் ஒருவர் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 15 லிட்டர் பயன்படுத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

மாதம் பெட்ரோலுக்காக இவருக்கு ஆகும் செலவு ரூபாய் 951.75.

இதில் 650.7 ரூபாயை இவர் அரசுக்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார். பெட்ரோலுக்கான விலை அல்ல!

இதில் பெட்ரோலுக்கான விலை வெறும் 330 ரூபாய் மட்டும் தான்!

மாதம் 650.7 எனில் வருடத்திற்கு 7808.4 ரூபாயை இவர் பெட்ரொல் வாங்குவதன் மூலம் அரசிற்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார்.

நானும் நீங்களும் பெட்ரோலுக்காக அரசிற்கு வருடா வருடம் கிட்டதட்ட 8 ஆயிரம் ரூபாய் வரியாக மட்டுமே கொடுக்கின்றோம். (மாதம் 15 லிட்டர் எனில்) இது தெரியுமா உங்களுக்கு ?.

இதில் 4 ஆயிரம் தமிழக அரசிற்கு, 4 ஆயிரம் மத்திய அரசிற்கு! என்ன கொடுமை இது!!!

100 கோடி மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் மோட்டார் வாகனம் பயன்படுத்தவதாக வைத்துக் கொண்டாலும் அரசுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 780840000000 (எத்தன ஆயிரம் கோடின்னு நீங்களே கணக்கு பன்னிக்கோங்க) பெட்ரோல் மூலம் வரி மட்டுமே வருகின்றது.

ஒரு பக்கம் எண்ணை நிறுவனங்கள் மூலம் வரும் லாபம், மறு பக்கம் அதை விட இரண்டு மடங்கு  வரி என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து வரும் லாபம்.

இவையெல்லாம் போதாது என்று மேலும் மேலும் பச்சை பொய் கூறி பெட்ரோல் விலைலை உயர்த்துகின்றது மத்திய அரசு.

எனவே பெட்ரோல் விலையின் உயர்வுக்கு காரணம் மத்திய மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள வரிகள் தானே தவிர பீப்பாய் விலையோ எண்னை நிறுவனிங்களின் நஷ்டமோ (அப்பட்டமான பொய்) கிடையாது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கூடுதலாக வரி விதிக்க காரணம்

1. தனியார் நிறுவனங்கள்

சமீபகாலமாக அரசு அதிகமாக வரி விதிப்பதற்கும் விலைய உயர்த்துவதற்கும் முக்கிய காரணம் தற்போது முலைத்துள்ள தனியார் எண்னை நிறுவனங்கள் தான்.

கனிமவளங்கள் நிறந்த நாட்டுடமைகளை அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து குறைந்த விலைக்கு வாங்கி தனியார் எண்னை நிறுவனங்கள் அதிலிருந்து வரும் எரிபொருளை அரசிற்கே கூடுதல் விலைக்கு விற்கின்றது மேலும் வெளிநாட்டில் இருந்து பெட்ரோலை வாங்கி உள்ள நாட்டில் அதிக விலைக்கு விற்கின்றது.

ஆம்! பெட்ரோலுக்காக நாம் கொடுக்கும் பணத்தில் ரிலைன்சுக்கும் பங்கு செல்கின்றது. இது போன்ற தனியார் எண்னை நிறுவனங்களின் வற்புறுத்தலின் பேரில் தான் அரசு, பெட்ரோல் விலையை நீங்களே (எண்னை நிறுவனங்களே) நிர்ணயித்துக் கொள்ளுங்கள் என சட்டம் கொண்டு வந்தது.

இதனால் தான் தற்போது பெட்ரொல் விலை அடிக்கடி உயர்கின்றது.

Reliance Industries என்று சொல்லப்படும் ரிலைன்சின் எண்னை நிறுவனத்தின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின்  லாபம் (நான்கு மாதத்தில்) எவ்வளவு தெரியுமா? 4923 கோடியாகும்.

இந்த லாபம் அரசின் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் ஆகியவற்றின் லாபத்தை விட இரண்டு மடங்கு கூடுதலானதாகும்.

தனியார் நிறுவனங்கள் அரசிடமிருந்து கனிமவலளங்கள் நிறைந்த இடத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதில் உள்ள எரிபொருளை சுத்திகரிப்பு செய்து மீண்டும் அரசிற்கே விற்கின்றன மேலும் வெளிநாட்டில் இருந்து வாங்கியும் அரசிற்கு விற்கின்றது.

இதை அரசே செய்தால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை, அரசிற்கு கூடுதல் லாபம் வரும் என்பதால் 65 சதவிகிதம் அளவிற்கு வரி விதிக்கவும் தேவையில்லை.

முகேஷ் அம்பானி போன்ற தனியார் நிறுவன தொழிலதிபர்கள் உலக பணக்கார வரிசையில் நான்காவது இடம் பிடிக்க நமது அரசியல் வாதிகள் பாடுபடுவதோடு பொதுமக்களையும் அதற்கு பணயமாக்குகின்றனர்.

2. வட்டி

65 சதவிகிதம் அளிவிற்கு வரி விதிப்பதற்கு மற்றுமொரு முக்கிய காணரம் உலக வங்கியில் இந்திய அரசு வாங்கியுள்ள கடன் தான்.

இத்தனை சதவிகிதம் வரி விதித்தால் தான் அரசின் கடன் மற்றும் வட்டியை கட்ட முடியும் என்ற கணக்கு உள்ளது.

அதன் அடிப்படையில் தான் வாங்கிய கடன் மற்றும் அதற்குரிய வட்டியை அடைப்பதற்கு ஏற்றாற்போன்று மத்திய மாநில அரசு வரிகளை விதிக்கின்றது.

பெட்ரோல் அன்றாடம் அனைவரும் பயன்படுத்தப்படும் பொருளாக இருப்பதால் அதற்கு கூடுதல் வரிகளை விதித்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்க அரசு, வட்டி மற்றும் தனியார் கலாச்சாரத்தை கைவிட வேண்டுமே தவிர பொதுமக்களை சுரண்டும் வண்ணம் வரிக்கு மேல் வரி விதிக்கக் கூடாது.

அமெரிக்காக போன்ற வளர்ந்த நாட்டில் வெறும் 18 சதவிகித வரி தான் பெட்ரோலுக்கு விதிக்கப்படுகின்றது.

18% எங்கே 65% எங்கே ?

பெட்ரோல் விலை உயர்வுக்கு தமிழக அரசும் காரணம்

மற்ற மாநிலங்களை விட அதிகமாக தமிழக அரசு 30 சதகவிதம் பெட்ரோலுக்கு வரி விதிக்கின்றது. ஒரு ரூபாய் க்கு அரிசி போடுகின்றேன் என்று கூறி தினமும் அன்றாடம் வேலைக்கு செல்லும் பொதுமக்களிடம் கோடி கோடியாய் பணத்தை பெட்ரோல் மூலம் சுருட்டுகின்றது இந்த தமிழக அரசு.

இந்த வரியை குறைக்குமாறு கலைஞரிடம் கேட்டதற்கு இதை குறைக்க முடியாது என்று சமீபத்தில் கூறியுள்ளார்.

இப்படி கோடிகோடியாய் பொதுமக்களிடமிருந்து வரி என்ற பெயரில் கொள்ளையடித்த பணத்தை தான்  ஓட்டு வாங்குவதற்காக கூத்தாடிகளுக்கு 'சொந்த இடம், சொந்த வீடு, படத்திற்கு வரி விலக்கு' பொன்ற சலுகைகள் வழங்க பயன்படுத்துகின்றார் இந்த கருணாநீதி.

இதுவல்லாமல் பொதுமக்களுக்கு 'அந்த திட்டம் இந்த திட்டம்' என்று அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிடுகின்றார்.

மேலோட்டமாக சலுகைகளை அறிவித்து விட்டு பொதுமக்களுக்கு தெரியாமல் பெட்ரோல் மூலம் பணத்தை வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றது இந்த தமிழக அரசு.

பெட்ரோல் விலை உயர்வுக்கும் கலைஞருக்கும் சம்பந்தமே இல்லாததை போன்ற மாயத் தோன்றம் ஏற்படுத்தப்படுகின்றது.

மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகத்தில் கூடுதலாகவே பெட்ரோலுக்கு வரி விதிக்கப்படுகின்றது.

மாநிலம் வாரியான பெட்ரோல் வரி பட்டியல்

State oil Petrol Diesel Kerosene gas
Andhra Pradesh 4 33 22.2 4 4
Maharastra 4 25 23 4 -
Gujarat - 23 21 - -
Madhya Pradesh - 28.7 23 4 4
Chattisgarh - 22 22 4 -
Goa - 22 21 4 4
Uttar Pradesh 4 26.5 17.2 4 -
Uttarakhand - 25 21 12.5 -
Delhi - 20 12.5 4 4
Himachal Pradesh - 25 14 - 4
Jammu, Kashmir - 20 12 4 4
Punjab - 27.5 8.8 4 4
Rajasthan - 28 18 4 -
Haryana 4 20 8.8 4 -
Chandigarh - 20 12.5 4 2
தமிழ்நாடு - 30 21.4 4 4
Pondicherry - 12.5 12.5 - 1
Kerala - 29 24.6 - -
Karnataka 1 25 18 4 1
Orissa - 18 18 4 4
Assam - 25.7 15.5 2 4
Bihar 2 16 16 8 8
Jharakhand - 20 14.5 4 4
West Bengal - 25 17 4 4
Manipur - 20 12.5 4 4
Meghalaya - 20 12.5 4 4
Tripura - 15 10 - 1.5
Mizoram - 18 10 - 2
Arunachal Pradesh - 20 12.5 4 4
nagaland - 20 12 5 4

போலி சலுகைகளை அறிவிப்பதை விட்டு விட்டு, வரி என்ற பெயரில் பொதுமக்கள் வயிற்றில் அடிக்காமல் தமிழக அரசு செயல்பட்டாலே போதும் என்பது பொதுமக்களின் கருத்து.

விலையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்ற நிலையிலும் வரி இல்லாமல் பெட்ரோலின் விலை வெறும் 22 ரூபாய் தான் ஆகின்றது.

இந்த 22 ரூபாயில் லாபமும் அடங்கும். வரி என்பது கூடுதலாக விதிக்கப்படுவது.

மத்திய மாநிலம் அரசுகள் போட்டிப் போட்டுக் கொண்டு வரி விதித்திருப்பதாலேயே பெட்ரோல் விலை தாருமாறாக உயர்ந்துள்ளது.

மத்திய மாநில அரசுகள் வரியை குறைத்தாலே போதும் பெட்ரோல் விலை குறைந்துவிடும். சர்வதே சந்தையில் குரூட் ஆயிலின் விலை கூடுவதினால் பெட்ரோல் விலை பெருமளவு கூடாது.

மத்திய அரசு வரியை குறைத்தால் தான் பெட்ரோல் விலை குறையும் என்பதில்லை தமிழக அரசு 30 சதவிகிதமாக இருக்கும் தற்போதை வரியை குறைந்த பட்சம் மற்ற மாநிலங்களை போன்று குறைத்தாலே போதும். பெட்ரோல் விலை கணிசமாக குறையும்.

பொதுமக்களாகிய நாம் தான் இதற்கு ஆவண செய்ய வேண்டும்!

அநியாயம்! அநியாயம்! எங்கும் இல்லாத அநியாயம்

20 ரூபாய் பொருளுக்கு 5 அல்லது 10 ரூபாய் வரி போட்டால் சகித்துக் கொள்ளலாம் ஆனால் கிட்டதட்ட 200 சதவிகித அளவிற்கு வரி போடும் அபாயகரமான நிலையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆம் 22 ரூபாய் பெட்ரோலுக்கு 41 ரூபாய் வரி!

ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட எந்த பொருளுக்கும் இந்த அளவிற்கு வரி விதித்திருக்க மாட்டார்கள்.

சமீப காலமாக ஏற்படும் விலை வாசி உயர்வுக்கு பெட்ரோல் விலை உயர்வும் முக்கிய காணரம்!

இதை கண்டு கொள்ளாமல்அரசு மெத்தனமாகவே செயல்படுகின்றது.

இதில் வேடிக்கையான விசயம் என்னவெனில் தற்போது உள்ள பிரதமர் பொருளாதார வல்லுணராம் அது தொடர்பாக நிறைய படித்துள்ளாராம். என்னத்த படிச்சாரோ தெரியல..

அரசியல் வாதிகள் ஆட்சியில் இருக்கும் பொது பெட்ரோலுக்கு தங்களது சொந்த பணத்தை செலவிட்டால் தானே அதன் கஷ்டம் புரியும், இவர்கள் பெட்ரோல் அலவன்ஸ் என்ற பெயரில் அரசின் பணத்தை தானே தங்களது வாகனத்திற்கு செலவிடுகின்றனர்.

எனவே பொதுமக்களின் கஷ்டம் இவர்களுக்கு எங்கு தெரியப்போகின்றது.

எனவே இந்த அநியாயத்தை பொதுமக்கள், தட்டி கேட்க தவறினால் 200 சதவிகிதம் என்ன, பெட்ரோலுக்கு 500 சதவிகிதம் கூட இவர்கள் வரி விதிப்பார்கள்.

Tntj.net இணையதள நேயர்களுக்காக.

S.M.அப்பாஸ்.M.I.Sc

Read More...

அநீதிக்கு எதிராக ஆர்த்தெழ அணி திரள்வீர் ததஜவின் சென்னை, மதுரை நீதிமன்ற முற்றுகைப் போராட்டத்தில்

துளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டுபிடித்திருக்கின்றது!

பாபர் மஸ்ஜித் தொடர்பான அலகாபாத் உயர் நீதி மன்றத்தின் கட்ட பஞ்சாயத்து தீர்ப்பை கண்டித்து சமூக அக்கறையாளர்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு.

மதசார்பின்மையில் ஒட்டையை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு!-ராஜேந்தர் சச்சார் (ஒய்வுப் பெற்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி)
இந்தத் தீர்ப்பு பல விஷயங்களைப் பாதிக்கச் செய்திருப்பதுடன், இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையிலேயே ஒட்டையை ஏற்படுத்திவிட்டது. 'பள்ளிவாசலை உடைத்து அழியுங்கள்…!' என்று கூறுவதைப் போல இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு இந்துக்களிடம் வழங்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் முடிவை எட்டுவதற்கு நம்பிக்கை ஒர் அடிப்படையாக இருக்கக்கூடாது.
இந்த விஷயத்தில் நடந்ததை மறந்துவிட்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன. நாம் எங்குச் செல்வது? எதை நோக்கிச் செல்வது?  ஒரு குற்றத்தை யாரும் மறந்து விடக்கூடாது. ஒரு குற்றத்தைச் செய்து விட்டு எவரும் தப்பி ஒடவிடாமல் இருப்பதை உறுதி செய்வது தான் நீதிமன்றத்தின் கடமை. முஸ்லிம்களின் சொத்துக்கள் மீது அவர்களுக்குள்ள உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. பொதுவான சட்டம் சொலவது என்னவென்றால் ஒரு மகன் தந்தையைக் கொன்றால், தந்தையின் சொத்துக்களைப் பெறும் உரிமை அவனுக்கு இல்லை என்பது தான்! ஆனால் இங்கோ பாபர் பள்ளிவாசலை இடித்த குண்டர்கள் தாங்கள் விரும்பியதைப்  பெற்றிருக்கிறார்கள்.


இந்தக் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்குச் சட்ட அடிப்படை எதுவும் கிடையாது-ராஜீவ் தவான் (மூத்த வழக்குறைஞர்)
பிரச்னையில் சம்பந்தப்பட்ட இரு பிரிவினருக்கும் சரி சமமாகக் கூட நிலம் பிரித்துத் தரப்படவில்லை. இஸ்லாமியருக்குச் சொந்தமான நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு அவர்களுக்கும், இரு பங்கு இந்துக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்குச் சட்ட அடிப்படை எதுவும் கிடையாது. தார்மீக நீதியும் கிடையாது. அது மட்டுமின்றி இத்தீர்ப்பு நிலத்திற்கு உரிமை கோரிய ஒரு பிரிவினருக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகும்.
இந்த தீர்ப்பு ஏராளமான குறைகளைக் கொண்டிருக்கிறது. இதிலுள்ள தவறுகள் சரிசெய்யப்படாவிட்டால் வரலாறே தவறாகிவிடும்.  இந்தியாவில் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதை ஆப்கானிஸ்தானில் பாமியன் சிலைகளைத் தாலிபான்கள் சிதைத்ததுடன் வெளிநாட்டவர்கள் ஒப்பிடுகின்றனர். பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதற்கும் முஸ்லிம்களுக்கு உரிய நிலம் அவர்களுக்கு மறுக்கப்படுவதற்கும் நீதி வழங்க மதச்சார்பற்ற நிர்வாகத்தால் முடியவில்லை. இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் கண்ணியத்துடன் நடத்தப்படுவதையும் அவர்களுக்குரிய மரியாதை வழங்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டியது இந்திய ஜனநாயகத்தின் தேவையாகும்.

நீதி பரிபாலனத்தின் சாதாரண நெறிமுறைக்கு முரணான தீர்ப்பு-அந்தி அர்ஜூனா (மூத்த வழக்குறைஞர், உச்சநீதிமன்றம்)
 பாபர் பள்ளிவாசல் தகர்க்கப்படாமல் இருந்திருந்தால் அது நின்ற இடத்தை இப்போது தீர்ப்பில் கூறப்பட்டிருப்பது போல் பிரிப்பதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்குமா? அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மிக தெளிவாக விடப்பட்டுள்ள அம்சம் டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சண்டித்தனத்தை கண்டிக்காதது தான்.  சர்ச்சைக்குரிய 2.72 ஏக்கர் நிலம் காலியான இடம் என்பது போல் நீதிபதிகள் கருதியுள்ளார்கள்…1992 பள்ளிவாசல் இடிப்பை இந்த தீர்ப்பு நியாயபடுத்தி அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது. வழக்கில் தொடர்புடைய இரு தரப்புகளில் ஒன்று வழக்கு தொடுக்கும் போது இருந்த நிலையை தனது வசதிக்கேற்ப சட்டத்தை தன் கையில் எடுத்து கொண்டு மாற்றிவிட்டால் (இந்த வழக்கில் இந்துத் தரப்பு), நீதிமன்றம் அந்த வன்செயலுக்கு முன்பிருந்த நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் நீதிமன்றங்களில் நிலவும் சாதாரண நீதி பரிபாலன முறையாகும். ஆனால் அவ்வாறு செய்வது இந்த வழக்கில் உள்ள நிலையை போல் சாத்தியமில்லை என்றால் சட்டத்தை தன் கையில் எடுத்துச் செயல்பட்டவர்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படும் வகையில் எந்த நீதிமன்றமும் செயல்படாது. அலஹாபாத் உயர்நீதிமன்றம் நீதி பரிபாலனத்தின் இந்த அடிப்படையை கூட உணராது தீர்ப்பு அளித்துள்ளது

தர்க்க ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் ஏற்கத் தக்கதாக இல்லை இந்த தீர்ப்பு(பி.எஸ். அப்பு (முன்னாள் தலைமைச் செயலாளர் பீகார்)
மூன்று நீதிபதிகளும் பள்ளிவாசலை முஸ்லிம்கள் பயன்படுத்தினர் என்றும் பள்ளிவாசலுக்கு வெளியில் 100 எட்டு தூரத்தில் உள்ள ராம் சபூட்ரா (திண்ணையை) இந்துக்கள் பயன்படுத்தினர் என்றும் கருதியுள்ளனர். எனவே இந்த விவாகாரத்தில் பள்ளிவாசல் இருந்த இடத்தை முஸ்லிம்களிடமும், ராம் சபூட்ரா மற்றும் சீதா கி ரோசி (சீதையின் சமையல்கட்டு) இருந்த இடத்தை  இந்துக்களிடம் ஒப்படைப்பதும் தான் நியாயமான, சாத்தியமான, நீதியான தீர்ப்பாக இருக்கும். திரேட்டா யூகத்தின் மிகப் பெரும் கதாநாயகனான ராமர், 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நீரில் சமாதியான ராமர், பள்ளிவாசலின் கும்பத்தின் கீழ் தான் பிறந்தார் என்று சொல்வது தர்க்க ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் ஏற்கத் தக்கதாக இல்லை. நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளை காத்து சட்டத்தின் கண்ணியத்தை காக்கும் வகையில் உச்சநீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு இறுதி தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்ப்போம்.

வரலாற்றுக்கு அவமானம் கற்பிக்கும் தீர்ப்பு-டி.என்.ஜா (வரலாற்றாசிரியர்)
வரலாற்று சான்றுகளை புறந்தள்ளும் வகையில் நம்பிக்கைகளை அனுமதிக்க கூடாது. என்ன நடந்துள்ளது என்றால் நம்பிக்கை பகுத்தறிவை வென்று விட்டதாக தோன்றுகிறது. வரலாற்றை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது நம்பிக்கை. இந்தத் தீர்ப்பு உண்மைக்கும், வரலாற்றுச் சான்றுகளுக்கும், வரலாறு எழுதியலுக்கும் இழைக்கப்பட்டுள்ள ஒரு அவமானம். தலைநகர் டெல்லியில் அனுமான் கோயில்களின் எண்ணிக்கை திடுதிடுப்பென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உரிமை இல்லாத நிலங்களில் கட்டப்படும் இந்த எண்ணற்ற அனுமன் கோயில்களால் எழும் பிரச்னைகளையும் ராமர் கோயில் பிரச்சினையோடு சேர்த்துத் தீர்க்கும்  பொறுப்புக்கு அரசம் நீதிமன்றங்களும் எதிர்காலத்தில் ஆளாகப் போகின்றன.

ஜனநாயகத்திற்கான தகுதிகளை இழந்து நிற்கிறோம்-நானி பால்கிவாலா
(பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் ராமர் பிறந்தாரா அங்கிருந்த கோயில் இடிக்கப்பட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பது குறித்து உச்சநீதிமன்றத்திடம் 1994ல் நரசிம்மராவ் அரசு கருத்துக் கேட்டப் போது எழுதியது)
நம்பிக்கைகள், வரலாறு, புராணம் மற்றும் உடனடி அரசியல் பிரச்சினைகளில் முடிவெடுக்க நீதிமன்றத்தை நாடுவதற்கு விரும்புகின்ற நிலை ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி இது குறித்து மிக்க ஆவலுடன் இருக்க நேர்ந்துள்ள நிலை உருவாகியுள்ளது (ஜனநாயகத்திற்கான) எல்லா தகுதிகளையும், நேர்மையையும் நாம் இழந்து நிற்பதையே காட்டுகிறது.


முஸ்லிம்களை போல இந்துக்கள் அமைதியாக இருப்பார்களா?-குல்தீப் நய்யார் (அரசியல் விமர்சகர்)
பாப்ரி பள்ளிவாசல் தீர்ப்புக்குப் பிறகு நாட்டில் சாந்தியும், சமாதானமும் நிலவுகிறது என்பதில் சந்தேகமே இல்லை. எங்கும் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை. இதன் பெருமை  முழுக்க முஸ்லிம்களுக்கே போய் சேரும். இதற்காக பாராட்டப்பட வேண்டியவர்களும் அவர்களே. அதற்குக் காரணம் உள்ளது.
பொதுவாக, தாங்கள் ஏமாற்றப்பட்டதாக அவர்கள் எண்ணியபோதும், நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், அத்தீர்ப்பில் திருப்தி அடையாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அந்த வாக்குறுதியை அவர்கள் சரியாகவே நிறைவேற்றியுள்ளனர். அந்த அடிப்படையில், இப்போது மேல் முறையீடு செய்யவிருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
ஒருவேளை, இத்தீர்ப்பு இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக வந்திருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பதை சற்று ஊகித்துப் பாருங்கள். அவர்கள் முஸ்லிம்களைப் போல் அமைதியாக இருந்திருப்பார்களா? தீர்ப்பு அவர்களுக்கு முழு அளவில் சாதகமாக இல்லாதிருந்தும்கூட தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக கூப்பாடு போடுகிறார்கள். எனவே, இத்தீர்ப்பை அவர்கள் தன்னடக்கத்தோடு ஏற்றுக்கொண்டனர் என்றோ, அதனால் முஸ்லிம்களின் அச்சம் குறைக்கப்பட்டிருக்கிறது என்றோ கருதுவதற்கு இடமில்லை. தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் இரு தரப்பினரும் கையாண்ட அணுகுமுறை முற்றிலும் வித்தியாசமானது என்பதை அனைவரும் அறிவர்.
சிறுபான்மை சமூகத்தினர், சட்டத்தை மதித்து, அதற்குக் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறும் போது பெரும்பான்மை இந்து சமுதாயம் அப்படி ஏதும் உறுதி கூற முன்வரவில்லை என்பது இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்கது. 1992ல் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது சட்டத்திற்குப் புறம்பான காரியமாகும்.

தற்கால அரசியலை நியாயப்படுத்துவதற்காக நாம் கடந்த காலத்தை மாற்றிவிட இயலாது-ரொமீலா தாப்பர் (வரலாற்று ஆசிரியர்)
இந்த தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் எந்த ஒரு குழுவும் தங்கள் கடவுள் இந்த இடத்தில் பிறந்தார் என்று கூறி தாங்கள் ஒரு பெரும் மதநம்பிக்கையாளர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு (அதாவது ராமர் பிறந்த இடம் குறித்து சங்பரிவார் ஒட்டுமொத்த ஹிந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொன்னது போல்) பிறருக்குச் சொந்தமான சொத்துக்களைக் கோருவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. இனி தேவையான சொத்துக்களை சுட்டிக்காட்டி சண்டையை ஏற்படுத்துவதற்காக இது போல பல ஜன்மஸ்தானங்கள் உருவாக்கப்படும். திட்டமிட்டு வரலாற்றுச் சின்னம் (பாபரி பள்ளிவாசல்) இடிக்கப்பட்டது கண்டிக்கப்படாத நிலையில் இது போன்ற இடிப்புச் செயல்களை எப்படி தடுத்து நிறுத்த இயலும்?
வரலாற்றில் நடந்தது நடந்தது தான். அதனை மாற்ற இயலாது. ஆனால் என்ன நடந்தது என்பதை முழுமையாக எப்படி புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதை நாம் கற்க இயலும். நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் அதில் பாடங்களை கற்க இயலும். தற்கால அரசியலை நியாயப்படுத்துவதற்காக நாம் கடந்த காலத்தை மாற்றிவிட இயலாது. இந்த தீர்ப்பு வரலாற்றின் மீதான மரியாதையை சிதைத்துள்ளது. வரலாற்றின் இடத்தில் மதநம்பிக்கையைப் புகுத்தியுள்ளது. இந்த நாட்டின் சட்ட பரிபாலனம் மதநம்பிக்கைகளின் அடிப்படையில் மட்டுமில்லாமல் சான்றுகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளது என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்படும் போதுதான் உண்மையான நல்லிணக்கம் ஏற்படும்.


அநீதியின் வெளிப்பாடு-ஹர்ஷ் மந்தர் (முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சமூக சேவகர்)
இந்த தீர்ப்பு நடுநிலையானது என்றும் நேர்மையானது என்றும் சில விமர்சகர்கள் கூறுவது எனக்கு வினோதமாக இருக்கின்றது. நாம் இனி பழையவற்றை மறந்து முன் செல்ல வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். நீதிக் கிடைப்பதை அனுபவிக்காத வரையில் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர இயலாது என்பதை அவர்கள் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள். இந்த வழக்கு குற்றவியல் ரீதியாக யார் தவறு செய்தார்கள் என்பதை நிர்ணயிக்கும் வழக்கு அல்ல என்பது உண்மை தான். அனால் இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ராமர் கோயில் கட்டும் இயக்கத்தின்; முக்கிய அடிப்படைகள் அனைத்தையும் கொள்கையளவில் ஏற்கும் வகையில் அமைந்துள்ளது….ராமர் கோயில் இயக்கத்தின் போர் பரணியாக 'அந்த இடத்தில் தான் ராமர் கோயில் கட்டுவோம்' என்பதே. நம்பதகாத வரலாறு மற்றும் விசுவாசத்தின் அடிப்படையிலும், ஏமாற்று மற்றும் அடக்குமுறையின் அடிப்படையிலும் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த தீர்ப்பின் மூலம் இந்தியாவின் மதசார்பற்ற அரசியல் சாசனச் சட்டத்திற்கு சவால் விட்டு நூற்றுக்கணக்கான உயிர்களை பறித்த, அச்சத்தையும் வெறுப்பையும் விதைத்த ஒரு இயக்கம் வெற்றிப் பெற்றுள்ளது.

துளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டுபிடித்திருக்கின்றது!-சித்தார்த் வரதராஜன் (தி ஹிந்து நாளிதழின் துணை ஆசிரியர்)
16வது நூற்றாண்டில் அயோத்தியில் தான் துளசிதாசர் ராம் சரித் மனாஸ் நூலை எழுதினார். எனினும் அதில் ராமர் பிறந்த இடம் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. ஆனால் அதன் பின் ஐந்து நூற்றாண்டுகள் கழித்து இப்போது ராமர் பிறந்த இடத்தை லக்னோ நீதிமன்றம் இவ்வளவு துல்லியமாக கண்டுபிடித்திருக்கின்றது!
இந்தியாவில் அனைத்துச் சமுதாயத்தினருக்கும் அனைத்து வகையான நம்பிக்கைகளும் இருக்கலாம். ஆனால் சட்டத்தில் எது தவறு எது சரி என்பதைத் தீர்மானிப்பதற்கான நடுவராக அந்த நம்பிக்கை மாறிவிடக்கூடாது. அதே போல், வரலாற்றுத் தவறுகளைத் திருத்துவதும், நீதி வழங்குவதற்கான அடிப்படையாக இருக்கக்கூடாது.



இன்ஷா அல்லாஹ், அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும், உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இவ்வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்த கோரியும், ஜனவரி 4, 2011 அன்று தமிழகம் தழுவிய அளவில் சென்னையிலும், மதுரையிலும் மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம் ,இன்னமும் 28  நாட்களே உள்ளன. குடும்பத்துடன் அலைகடலென திரண்டு வாருங்கள் என அன்புடன் அழைக்கிறது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம்.

                                           
Read More...

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சவுதியிலிருந்து ஒரு மடல்!


ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

இசைத்துறையில் ஆஸ்கார் விருது பெற்ற அன்பு சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக!
'சவுதி அரேபியாவுக்கு சென்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜித்தாவில் உற்சாக வரவேற்பு',  'புனித பூமியில் பிறந்தநாள் கொண்டாடிய இசைமேதை' என்றெல்லாம் சில தினங்களுக்கு முன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. அதுபற்றி தெளிவுபடுத்த விரும்பியதன் விளைவே இந்த கட்டுரை. 

ஆஸ்கார் விருது பெற்றபோது எல்லா புகழும் இறைவனுக்கே! என்று மிகத் தெளிவாக அறிவித்து எங்களைப் போன்றவர்களை வியப்பில் ஆழ்த்தினீர்கள். இஸ்லாத்தில் இசை என்பது தடுக்கப்பட்டது. ஒரு சாராயக்டையை அல்லது ஒரு விபச்சார விடுதியை நடத்தி அதன் மூலமாக வரும் கோடிக்கணக்கான வருமானத்தை ஒருவன் ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்தாலும் அவன் செய்யும் வியாபாரம் ஹலாலாக ஆகிவிடாது. தடுக்கப்பட்டதை செய்து மக்களை வழிகெடுத்ததற்கான தண்டனையை அவன் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது இஸ்லாமிய நியதி. உங்களது இசையும் அது போன்றதே! நீங்கள் அமைக்கும் இசையானது வெறும் இசையுடன் மட்டுமின்றி ஆபாசக்காட்சிகளுடன் வெளியிடப்படுகின்றன. அந்நியர்களுடன் சரச  சல்லாபத்தில் ஈடுபடுவதும் அங்க அவயங்களை மாற்றாருக்கு காண்பிப்பதும் இஸ்லாத்தில் மிகப்பெரும் தவறு என்பதை தாங்கள் அறியாமலிருந்தால் அதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன். ஒரு தீமையை செய்ததற்காக கிடைத்த விருதை நீங்கள் பெற்றபோது 'எல்லா புகழும் இறைவனுக்கே! என நீங்கள் விளித்தது 'நன்மையும் தீமையும் இறைவனிடத்தில் இருந்து வருபவை' என்ற இஸ்லாமிய கோட்பாட்டின் படி மட்டுமே சரியானது. ஆனால் தீமை செய்ததற்கான தண்டனையை மறுமையில் அனுபவித்தே ஆக வேண்டும். 

ஒருவன் பிற மதத்திலிருந்து இஸ்லாத்தை தேர்ந்தெடுத்து வந்தால் அவனது முந்தைய பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விடுகின்றான் என நமது வழிகாட்டியாகிய நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவ்வாறு அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்ட நீங்கள் மீண்டும் தர்ஹாக்களுக்கு சென்று இணைவைப்பு எனும் பாவத்தை சம்பாதித்து வருகின்றீர்கள்.


காத்ரீனா கைஃப், ஷில்பா ஷெட்டி போன்றவர்களெல்லாம் தலையில் பூக்கூடை அணிந்தவர்களாக அஜ்மீர் தர்ஹாவுக்கு செல்கிறார்கள் என்றால் அது பிழைப்புக்காக! முஸ்லிம் ரசிகர்களும் படம் பார்க்க வரவேண்டும் என்ற நப்பாசையும் தனது படம் நிறைய நாள் ஓடவேண்டும்  என்ற சுயலமும் தான் அதற்கு காரணம். அவர்களை பொறுத்தவரை அது பத்தோடு பதினொன்று. கோவிலுக்கும் செல்வார்கள், சர்ச்சுக்கும் செல்வார்கள், தர்ஹாவுக்கும் செல்வார்கள். 



இறைவனைத் தவிர வேறு எவராலும் நமக்கு எதையும் தந்திட முடியாது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. 'எம்மதமும் சம்மதம்' என்று சொல்பவன் ஏக இறைவனை வணங்கக் கூடியவனாக இருக்க முடியாது. பல தெய்வ கொள்கைகளை தகர்த்து ஏக தெய்வ கொள்கையை இஸ்லாம் வலியுறுத்துகிறது. அப்படியிருக்க கல், மண், கப்ரு, மகான் என்பனவற்றிற்கு சக்தி எங்கிருந்து வரும். அவைகளால் திரைப்படம் அதிக நாள் ஓடும் என நீங்கள் நம்பினால் நீங்கள் இஸ்லாத்திலிருந்து விலகி விட்டீர்கள் என்றே அர்த்தம். உங்களை ஒரு இஸ்லாமியராக உலகம் பார்ப்பதால் தர்ஹாக்களுக்கு நீங்கள் செல்வதை இஸ்லாமிய வழிபாட்டில் ஒரு பகுதியாக சிலர் எண்ணும் வாய்ப்புகளுண்டு. அது களையப்பட வேண்டும். ஆனால் இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், உங்களை ஜித்தாவில் வரவேற்றவர்கள் இசை என்பது ஹராமென்றோ, தர்ஹாக்களிடம் கையேந்துவது மிகக் கொடிய பாவம் என்றோ தங்களுக்கு ஏன் சொல்லவில்லை என்பது தான். உங்களை வரவேற்ற முஸ்லிம் பெயர்தாங்கிகள் அனைவருமே ஒரு பிரபலத்துடன் போஸ் கொடுக்க வேண்டும் என்ற நினைப்புடன் நடந்துள்ளார்கள் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

மக்காவில் உம்ரா செய்ய வேண்டுமென்று வந்ததாகவும் அந்த புண்ணிய பூமியில் தங்களது பிறந்தநாளை கொண்டாட வேண்டுமென்றும் விரும்பியதாக தாங்கள் பேட்டியளித்துள்ளீர்கள். அஜ்மீர் தர்ஹா, கடப்பா தர்ஹாவிற்கு சென்று பிரார்த்திப்பது போன்றதல்ல மக்காவுக்கு செல்வது என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எண்ணப்படி தான் செயல்கள் அமையும் என்பது புகாரி ஹதீஸ் புத்தகத்தில் வரும் முதலாவது ஹதீஸ். இதுவரை நீங்கள் படிக்காமலிருந்தால் இன்றே அதை புரட்டுங்கள். ஒருவன் தனது நாட்டை, குடும்பத்தை, செல்வத்தை விட்டு அடுத்த நாட்டுக்கு ஹிஜ்ரத் செய்யும் போது அங்கே இருக்கும் அழகான பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என எண்ணி இருந்தால் அது நிறைவேறும். ஆனால் இறைவனின் பொருத்தத்தை அடைய முடியாது என்பது அந்த ஹதீஸின் அர்த்தம். பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்ற அர்த்தத்தில் நீங்கள் வந்திருந்தால் அது நிறைவேறிவிட்டது, உம்ரா இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது சந்தேகமானதே! அதை இறைவன் ஒருவனே அறிவான். 

பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை, நாம் போற்றும் நபிகளார் பெருமானார் (ஸல்) அவர்கள் தனது எந்த பிறந்தநாளுக்கும் கேக் வெட்டியதில்லை, இன்று என்னுடைய பிறந்தநாள், எனவே விழா எடுங்கள் என்றோ சொன்னதில்லை, அவர்களது காலத்தில் பாசத்திற்குரிய குழந்தைளுக்கும் அன்பிற்குரிய மனைவிகளுக்கும் நேசத்திற்குரிய தோழர்களுக்கும் பிறந்தநாள் கொண்டாடியதில்லை, அதை அனுமதிக்கவுமில்லை. ஆனால் அறியாமையால் நீங்கள் கேக் வெட்ட முனைந்த போது தங்களுடன் இருந்த எவருமே தடுக்காதது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். அந்த இடத்தில் அது தவறு என்பதை தங்களுக்கு அவர்கள் உணர்த்தி இருந்தால் தாங்களும் அதை உணர்ந்து அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பீர்கள். அதன் மூலமாக தமிழ் முஸ்லிம்களிடத்தில் அது பற்றிய ஒரு விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கும். தாங்கள் செய்த அச்செயல் இன்று ஒரு முன்னுதாரணமாக மாறிவிடுமோ என்ற கவலையே என்னுள் எழுகின்றது. 

பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவது இஸ்லாமிய கலாச்சாரமல்ல! அதுவும் சவுதி அரேபியாவில் அதை அனுமதித்த ஜித்தா நண்பர்கள் மிகப்பெறும் தவறிழைத்துவிட்டார்கள். அவர்கள் தங்களை இஸ்லாமியனாக பார்க்கவில்லை. உடன் நின்று போட்டோ எடுக்கும் பிரபலமாகத் தான் பார்த்திருக்கின்றார்கள். இல்லையேல் உம்ரா செய்யும் போது மொட்டை அடிப்பது தான் சிறந்தது என்பதை சொல்லி தந்திருப்பார்கள். ஏனெனில் உம்ரா செய்துவிட்டு முடிகளை விரலளவு களைவதை இஸ்லாம் கற்றுத்தரவில்லை. மொட்டையடிப்பதை சிறந்ததாக கூறுகிறது. மொட்டையடித்தவர்களுக்காக நபிகள் பெருமானார் மூன்று முறை பிரார்த்தனை செய்துள்ளார்கள் என்பதை உங்களது வழிகாட்டிகள் உங்களுக்கு சொல்லித்தரவில்லை. அவர்களுக்கும் தெரிந்திருக்குமோ என்பதும் சந்தேகமே!

சரி! தங்களது பிறந்தநாளில் என்ன வித்தியாசத்தை நீங்கள் பார்த்தீர்கள். வயதை அளவிடும் ஒரு நாளே தவிர எந்த சிறப்பும் அதற்கு இல்லை. ஆண்டுக்கொருமுறை தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்பதை எதன் அடிப்படையில் தீர்மானித்தீர்கள். வருடத்திற்கொருமுறை ஏன் அந்த நாளை கொண்டாட வேண்டும். மாதத்திற்கொரு முறை கொண்டாடலாமே? ஒவ்வொரு மாதமும் 6ம் தேதி கொண்டாடலாமே? ஏன்? கிழமையை கணக்கிட்டு வாரத்திற்கொருமுறை கூட கொண்டாடலாமே? நீங்கள் பிறந்தது திங்கள்கிழமை என்றால் இன்று அது வியாழக்கிழமை! பின் எவ்வாறு பிறந்தநாள் கொண்டாட முடியும். எனவே சிந்தியுங்கள்! 

நம்மை பொறுத்தவரை வாழ்க்கை என்பது இந்த உலகத்துடன் முடிந்து விடுவதில்லை. மறுமை உலகம் என்ற மாபெரும் பேறு நமக்காக காத்திருக்கின்றது. அதில் நாம் வெற்றியடைய வேண்டுமாயின் அதற்கான தேர்வுக்கூடம் தான் இது. உங்களை புகழ்ந்து கொண்டும் உங்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பவர்களும் மறுமையில் உங்களுக்கு துணையாக வரமாட்டார்கள். மறுமை நாளிலே இந்த கூட்டமெல்லாம் உங்களை வரவேற்க வராது, உதவிகள் செய்யாது. நீங்கள் மட்டும் தனித்து விடப்படுவீர்கள். மரணிக்குமுன் நீங்கள் தவறுகளுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டுவிட்டால் அவன் நாடினால் மன்னித்துவிடுவான்.


இறுதியாக, தமிழகத்திலோ அல்லது வடமாநிலங்களிலோ இந்த பிறந்தநாளை நீங்கள் கொண்டாட திட்டமிட்டிருந்தால் திரையுலகமும் ஆட்சியாளர்களும் திரண்டு ஊரே கோலாகலமாக இருந்திருக்கும். ஆனால் அதைவிட புனித பூமியான மக்காவிற்கு செல்வதை நீங்கள் சிறந்ததாக கருதியதிலிருந்து அந்த புகழாரத்தை விட மக்காவின் அமைதியை நீங்கள் விரும்பியுள்ளீர்கள் என்பது தெளிவாகின்றது. எனவே தங்களை சுற்றியுள்ள கூட்டமே தங்களை முழுமையாக இஸ்லாத்தில் நுழையவிடாமல் தடுக்கின்றன என்பதை என்னால் உணர முடிகின்றது. 

ரசிகர்கள் கூட்டத்தை கண்டு புளகாங்கிதம் அடையாமல் மறுமையை பற்றிய தேடுதலை அதிகப்படுத்துங்கள். அப்போது மிகப்பெரிய மாற்றத்தை காண்பீர்கள். உங்களது தேடுதலில் இறைவனை பற்றிய அறிவை நீங்கள் பெற்றுவிட்டால் கல்லை, கபரை, மனிதனை வணங்க கூடாது என நீங்கள் முடிவெடுத்து விடுவீர்கள். ஆனால் அதை அறிவித்து விட்டால் நீங்கள் தனித்து விடப்படுவீர்கள். எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும். இசை, பாடல்களின் மூலம் கிடைத்த புகழாரம் மற்றும் வருமானம் நின்று போகும். உங்களின் இசை, ஆடல், பாடல்களை ரசித்து உங்களை சுற்றிலும் இருப்பவர்கள் உங்களை வெறுக்க ஆரம்பித்து விடுவர். நீங்கள் தனித்து விடப்படுவீர்கள். இந்த விளைவுகளுக்கு நீங்கள் தயாராக இருந்தால் இன்றே தங்களது தேடுதலை துவக்குங்கள்.  

அன்பிற்குரிய ரஹ்மான்! 
நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதும் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டதை போல இணைவைப்பிலிருந்து விலகி தவ்பா செய்தால் மீண்டும் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாக மாறுவீர்கள், மாறவேண்டும் என்பதே எனது அவா. ஏனெனில் மறுமை நன்மைக்காகத் தான் நீங்கள் உம்ராவுக்கும் வந்தீர்கள். மதீனாவிலிருந்து ஜித்தா செல்ல பிளைட்டுக்கு நேரமாவதைக் கூட உணராமல் பிரார்த்தனையில் லியித்ததாகவும் அதனால் பிளைட்டை தவற விட்டுவிட்டு காரில் ஜித்தா செல்லும் நிலை எற்பட்டதாகவும் செய்தி அறிந்தேன். பிரார்த்தனையில் இத்தனை நிகழ்வுகள் நிகழும் போது மறுமையில் கேள்விக்கணக்கு நாளில் நமது நிலை என்னவாக இருக்கும்! அங்கு தனித்து விடப்படுவதை காட்டிலும் இவ்வுலகில் தனித்து விடப்படுவது துன்பம் தரும் விஷயமல்ல. மரணத்திற்கு பின் இருப்பதே நிலையான வாழ்க்கை என்பதை அறிந்து கொண்டு தீயவைகளை களைந்து இறைவனுக்கு பிடித்தவற்றை மட்டும் செய்யக்கூடியவனாக தங்களை இறைவன் மாற்றவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தவனாக முடிக்கின்றேன்.

ரியாதிலிருந்து அபு ஆஃபியா


உணர்வு' இதழில் வெளிவந்த கட்டுரை 



Read More...
Related Posts Plugin for WordPress, Blogger...
 
Copyright (c) 2011 Designed byDezMatix
Other Links : TNTJ NEWS PORTAL, Online PJ,