Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Nadu Thowheed Jamaath - Seven Wells Branch Headline Animator

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தானும் நல்ல அமல் செய்து தான் ஒரு முஸ்லிம் என்று கூறுபவனை விட அழகிய சொல்லுக்குரியவன் யார் ?

மீலாது விழா Notice





Read More...

தர்ஹாக்களை தரைமட்டமாக்குங்கள்

ஏக இறைவனின் திருப்பெயரால்

தர்ஹாக்களை தரைமட்டமாக்குங்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "(தரையைவிட ) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரைமட்டமாக்காமல் விட்டு விடாதிர் "
(அறிவப்பவர் : அலி (ரலி) நூல் : முஸ்லீம் 1764 )

அல்ல்ஹாவின் தூதர் ஸல் அவர்கள் கப்ரை தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்.
(அறிவப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லீம் 1765)

மேற்கண்ட ஹதீஸ்களெல்லாம் "ரஹ்மத் அரகட்டளையின்" மூலம் வெளியிடப்பட்டு, சுன்னத் ஜமாஅத் மௌலவிகளால் மொழிபெயர்க்கப்ட்டு, கடையநல்லூர் பைஜூல் அன்வார் அரபி கல்லூரி முதல்வர் காஜா மொஹிதீன் அஸ்ஸலாமி, லால் பேட்டை மன்பசுல் உலூம் அரபிக்கலூரி துணை முதவர் நூருல் அமீன் மன்பயி, சென்னை காஷிபூல் ஹூதா அரபிகல்லூரி பேராசிரியர் இரஹீம் பாகவி , காசாமி இன்னும் பல உலமாக்கள் வழங்கி வெளியிடப்பட்டுள்ள ஸஹீஹ் முஸ்லீமின் தமிழ் மொழி பெயர்பிலுள்ள ஹதீஸ்கல் தான்.

சிந்தித்து பாருங்கள் ! சுன்னத் ஜமாஅத் மௌலவிகளே! கப்ருகளை கட்டகூடாது , கட்டப்பட்ட கப்ருகளை இடிக்க வேண்டும் , தர்கா கட்டகூடாது என நபி அவர்கள் கூறிய செய்திகளை மொழி பெயர் திருக்கிறார்கள். இதற்கு பிறகும் சாபம் இறங்கும் தர்ஹாக்கள் தேவையா ?

படைத்தவனை மறந்துவிட்டு யானைகளுக்குபின்னால் சினிமா பாடுகளுடன், ஆட்டம் பூட்டு கொண்டு ஆணுகளும், பெண்களும் கண்ணயரும், காளையரும், கலர்புல்லாக காட்சிதந்து ஒருவரை ஒருவர் கண்டுகளித்து இப்படி கூதடின்கின்ர மார்கத்தயா , நபி ஸல் அவர்கள் காடிதந்தார்கள் , தீநோறாய் சிந்திந்து பாருங்கள் .

நபி ஸல் அவர்கள் தாம் மரணிப்பதற்கு முனால் நோயிற்றிந்த பொது " யஹுதிகளையும், நாசராகளையும் அல்லாஹ் சபிப்பானாக அவர்கள் தங்கள் நபி மார்களின் மண்ணறைகளை வன்ன்கச்தளைகலாக ஆக்கஈவிட்டன்ர் என்று கூறினார்கள் .
(அறிவப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி 1330)

நபி மார்களுக்கி தர்ஹா கட்ட்யவர்களுக்கு அல்ல்ஹவுடி சாபம் ஏற்பட்டு விட்டது என்றால் இன்றைக்கு ஏர்வாடி , நாகூர் , அஜ்மீர் போன்ற இடங்களில் வலிமார்கள் என்றபெயரில் மனிதகளுக்கும் , யானைகொல்லுக்கும் , கட்டைபீடி மச்தாங்களுக்கும் , தர்ஹாக்கள் கட்டி உள்ளீர்களே !! கந்தூரி கொண்டாடுகிறீர்களே இது யாருடைய கலாச்சராம் ? யஹூது நசாரக்களின் கலாச்சராம் அல்லவா ? இறைவனுடைய சாபத்தை அஞ்சி கொள்ளுங்கள் .

அல்லாஹுவுடைய பாதையில் கொள்ளபட்டவர்களிடம் (ஷஹீதுகள்) உதவி தேடுவது சாத்தியமா ?

அல்லாஹுவின் பாதையில் கொள்ளபட்டோரை இருந்தூர் என கூறாதீர்கள் ! மாறாக உய்ருடன் உள்ளனர் . எனினும் நீங்கள் உணரமாடீர்கள் (அல் குர்ஆன் - 2 :154 ), இறந்தவர்களை எண்ணாதீர்கள் (அல் குர்ஆன் - 3:169) ஆகிய வசனங்கள் கூறுவதை மூஸ்லீம்கள் தவறாக சிலர் புரிந்து அவர்களிடம் பிரார்த்திக்கலாம் என்பதிற்கு இவ்வசனகள் சான்றாக அமைந்துள்ளதாக அவர்கள் விளங்கி கொண்டுள்ளனர்,. இது பல காரங்களால் தவாறன விளக்கமாகும்

இவ்வசனகள் நல்லடியார்கள் மற்றும் மாகன்களை கொண்டாடவோ , அவர்களுக்கு வழிபாடு நடுதுவதை அனுமதிக்கவோ அருளப்படவில்லை . அல்லாஹ்வின் பாதியில் உயிர்த்தியாகம் செய்ய ஒருவர் தயங்ககூடாது என்பதை வலயுரித்தவே அருளப்பட்டன .
இவ்வசனகள் அருளபட்டபின் , நபிகள் நாயகம் ஸல் அவர்களோ , நபி தோழர்களோ அல்லாஹ்வின் பாதியில் கொல்லபட்டவர்களை அழைக்கவோ , பிறர்திக்கவோ இல்லை என்பதை முதலில் விளங்கி கொள்ள வேண்டும் .

இவ்வசனகளை கவனமாக ஆய்வு செய்தால் அவகளின் விளக்கம் தவறு என்பதை அவர்களே அறியலாம் . ௨.௧௫௪ அவது வசனத்தில் "அவர்கள் உயிருடன் உள்ளனர் " என்பதுடன் "எனினும் நீங்கள் உணரமாடீர்கள் " என்றும் கூறப்பட்டுள்ளது . அவர்கள் உயிருடன் இருபது நாம் உணர்துள்ள கருத்தில் அல்ல. நம்மால் உணர்ந்து கொள்ள்ளமுடியாத வேறு வகையில் உயிருடன் இருக்கிறார்கள் என்ற கருத்தை இது தரும் . ௩:௧௬௯ வசனமும் அதை தொடர்ந்து வரும் நான்கு வசனக்லூம், இதை இன்னும் தெளிவாக கூறிகின்றன . ௩:௧௬௩ வசனம் . " தம் இறைவினடம் உயிருடன் உள்ளனர் " என கூறிகிறது . நம்மை பொறுத்தவரை அவர்கள் மரணிதவிட்டலூம் , இறைவனை பொறுத்தவரை அவர்கள் உயிருடன் உள்ளனர் என்று கூறபடுகிறது . இவை அனைத்தையும் விட இவ்வசனத்திற்கு அல்லாஹ்வின் தூதர் அளித்த விளக்கம் முக்கியமானதாகும் .

உயிருடன் இருக்கிறார்கள் என்றால் எப்படி ? என்று நாங்கள் கேட்டபொழுது அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்து பறவை கூடுக்குள் இருக்கும் அவை சொர்கத்தில் விருபியவாறு சுற்றி திரியும்என்று நபி ஸல் அவர்கள் விளக்கம் அளித்தார்கள்
(அறிவப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி) நூல் : புகாரி 3500)

நியாயத் தீர்பிர்க்கு பிறகு தான் நல்லோர்கள் சொர்க்கம் செல்வார்கள் எனவே தன் மனித வடிவில் இல்லமால் பச்சை நிறப் பறவைகளாக சுற்றி வருவார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

அல்லாஹுவின் பாதையில் கொல்லப்பட்டவரின் சொத்திக்களை வாரிசுகள் எடுத்து கொல்லாலமா ? அவரது மனைவி மற்றவரை மணந்து கொள்ளலாமா ? கேட்டால் செய்யலாம் என்று தான் தர்ஹாவிற்கு செல்லகூடியவர்களும் , தர்ஹாவ ஆதரிப்பவர்களும் பதிலளிப்பார்கள் . அவர்கள் நம்மை பொறுத்தவரை இறந்துவிட்டார்கள் என்று இவர்களும் ஒப்பு கொல்வடஹி இதில் இருந்து அறியலாம் .
நம்மை போலவே உயிருடன் உள்ளனர் என்று ஒரு வாதற்றிக்கு வைத்து கொள்வோம் . ஒருவர் உயிருடன் இருப்பதால் அவரிடம் பிரார்த்திக்கலாமா ? அவருக்கு கடவுள் தனமி வந்து விடுமா ? நாம் ந்யிருடன் தான் இருக்கிறோம். நம்மில் ஒருவர் மற்றொருவரிடம் பிரார்த்தனை செய்யலாமா ?

ஈஸா நபி அலை அவர்கள் இன்று வரை உயிருடன் தான் உள்ளனர் என்று பல இடங்களில் அல்லாஹ் கூறிகிறான் (பார்க்கஅல் குர்ஆன் : 4 :157 முதல் 159 வரை , 5 :75 , 43 : 61 )

ஈஸா நபி அலை அவர்கள் இவ்வுலகில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்கள் , அவர்களை அழைத்து பிரார்த்தித்தும் கிருஸ்துவர்கள் நடவடிக்கை தவறானது என்று நம்புகின்ற முஸ்லிம்கள் ஈஸா நபிக்கு சமாமாக இல்லாதவர்களிடம் பிரார்த்திப்பது எந்த வகையில் நியாயமாகும்

அனைத்தையும் படைத்தது பரிபாலித்து , அனைத்திற்கும் ஆற்றல் உள்ளவநிடம்தான் பிரார்த்திக்க வேண்டும், உயிருடன் இருப்பதால் மட்டும் ஒருவரிடம் பிரார்த்திக்க முடியாது . அல்லாஹுவின் பாதையில் ஒருவர் கொள்ளபடரா ? அல்லது பெருமைக்காக போருக்கு சென்று கொள்ளபட்டாரா என்பது அல்லாஹ்விற்கு மட்டுமே தெரிந்த விஷயம் . ஒருவர் அல்லாஹுவின் பாதையில் தான் கொல்லபட்டாரா என்பது நாம் முடிவு செய்ய இயலாது . இதும் கவனத்தில் கொள்ளவேண்டும் . இவை தவிர அல்லாஹ்வை தவிர யாரிடமும் பிரார்த்தனை செய்ய செய்யகூடாது என்று கூறும் நூறுக்கணக்கான இறை வசனங்கள் உள்ளன அவற்றில் சில
(3.186,3.38,2.29,7.55,7.56,7.180,7.194,7.197,10.12,10.106,13.14,14.39,14.40,16.20,17.56,17.110,19.4,2190,22.12,2213,22.62,22.73,22.117,22.62,31.30,35.13,35.14,35.40,39.38,40.12,40.20,40.60,40.66,46.4,46.5) போன்ற வசனங்கள் அல்லாஹ்வை தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்க அதிகாராம் இல்லை என்று கூறுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லாஹிவ்டம் (சிபாரிசு ) பரிந்துரை செய்வார்களா ?

அல்லஹ்வை அன்றி அவரகளுக்கு தீமையையும் , நன்மையையும் செய்யதவற்றை வணங்குகின்றனர் . அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்கு பரிதுரை செய்வார்கள் என்றும் கூறுகின்றனர் . வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்கு தெரியாததை அவனுக்கு சொல்லிகொடுகிரீர்களா ? அவன் தூயவன்அவன்ர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்தவன் " என்று கூறுவீராக (அல்குர்ஆன் 10 .18 )

மேற்கூறிய வசனம் " தர்ஹவில் அடக்கம் செய்யப்பட்டு இருப்பவர்கள் வலிமார்கள் என்று சொல்லபடுபவர்கள், அல்லாஹ்விடம் எந்த பரிந்துரையும் செய்ய முடியாது என்பதை பிரகடனப்படுத்துகிறது

இறுதி எச்சரிக்கை

(நரக நெருப்பில் ) அவர்களுடைய முகங்கள் புரட்டப்டும் அந்நாளில் (மறுமையில் ) ஆ !! கை சேதமே !! அல்லாஹ்வுக்கே நாங்கள் வழிபட்டு இருக்க வேண்டுமே !! இதுதருக்கும் நாங்கள் கட்டு பட்டு இருக்க வேண்டுமே என்று கூறுவார்கள் . எங்கள் இறைவா !! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் , எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம் அவர்கள் எங்களை வலிகேடுத்துவேட்டார்கள் என்று அவர்கள் கூறுவார்கள் (அல்குர்ஆன் 3 .66 ,67 )

அல்லாஹுவுக்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும், மாற்றமாக தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக மார்க்கத்தை மறைத்து , பிழைப்பு நடதுவர்களின் பேச்சை கேட்டு வழி கெடுபவர்கள் புலம்பும் புலம்பளைதான் அல்லாஹு திரு மறையில் அல்குர்ஆனில் கூரிகாட்டுகிறான் . இப்படி புலம்பும் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கதிருக்க அல்லாஹ்விடம் மட்டும் நாம் பிரார்த்தனை செய்வோம்
Read More...

ஆன்மீக உண்மையை உணர்த்தியது யார்? நித்தியானந்தாவா? காதர் மொய்தீனா?

காதர் மொய்தீன் அவர்கள், சாமியார்களை தேடிச் சென்றது சத்திய இஸ்லாத்தை போதிக்கத்தான் என்று தவறாக எண்ணிக் கொண்டு அவர் மீது தாங்கள் வைத்துள்ள குருட்டு பக்தியின் காரணமாக சில கேள்விகளை நம் இணையதளத்திற்கு அனுப்பினர். அதற்கு அபு அஹ்சன் அளித்த பதில் இதோ:

அவர்களுக்கு பதில் கூறுவதுடன் காதர் மொய்தீன் அவர்களின் மற்ற சில இஸ்லாமிய அடிப்படை கொள்கைளை குழி தோண்டி புதைக்கும் புகைப்படங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறோம்.

அப்பாவிகளின் கேள்வி : பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் இந்து மத சாமியார்கள் மத்தியில் மட்டு மல்லாது கிறிஸ்தவ மற்றும் பல மத அறிஞர்கள், ஏன் நாத்திகர்கள் மத்தியிலும்ஆன்மீகத்தின் உண்மை நிலையை உணர்த்தி அழகிய முறையில் அழைப்புப் பணி செய்து வருகிறார்.

பதில் : காதர் மொய்தீன் சத்திய இஸ்லாத்தை போதித்த லட்சனத்தை கீழ்காணும் புகைப்படத்தை பார்க்கும்போதே தெரிகிறது (தேதி இடம் உடன் இருப்பவர்கள் அனைத்து விபரமும் புகைப்படத்தின் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது)


தனக்கு சிலை வைத்து கும்பிடச் சொல்லி இறை மறுப்புக் கொள்கையை போதிக்கும் நித்யானந்தா (போலி ஆன்மீகம்) வின் உரைகள் அடங்கிய டி.வி.டி யை வெளியிடுகிறார் காதர் மொய்தீன்.

சத்தியத்தை போதிக்கச் சென்றவர்? அசத்தியத்தை பல் இழித்து வாங்கி வந்திருக்கிறார் இது தான் இஸ்லாத்தை பொதிக்கும் லட்சனமா?

அருகிலேயே ஜட்டி போட்ட சாமியாரின் வெட்கம் கெட்ட தோற்றத்தை கையாளோ , நாவாலோ தடுக்காமல் மனதாலும் வெறுக்காமாலும் வெட்க உணர்வு இல்லாமலும் ஜட்டி போட்ட ஆசாமியின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார். இதில் இஸ்லாமிய போதனைகள் எங்கே இருக்கின்றது.தேடித் தாருங்கள்.

காதர் மொய்தீன் வெளியிடும் டிவிடியை ஒருவர் வாங்கி கேட்டு அதன் படி நடந்தால் அவர் மறுமையில் சுவனம் செல்வாரா நரகம் செல்வாரா? முஸ்லிம்கள் நரகத்திற்கு சென்று நாசமாகி போனாலும் பராவயில்லை தனக்கு பதவிதான் முக்கியம் என இது போன் காரியத்தை செய்யும் காதர் மொய்தினா முஸ்லிம் சமுதாயத்தின் காவலரா?

இவரா இஸ்லாத்தை போதிக்கின்றவர்? இவரா முஸ்லிம்களை வெற்றியின் பால் அழைத்துச் செல்பவர்? இதையும் ஒருவர் நியாப்படுத்துகின்றார் என்றால் அவரையும் எந்த லிஸ்டில் சேர்ப்பது என்று தெரியவில்லை!

நாத்திகர்கள் மத்தியிலும் ஆன்மீகத்தின் உண்மை நிலையை உணர்த்தி அழகிய முறையில் அழைப்புப் பணி செய்து வருகிறார்

என்று கூறும் இவர்கள் காதர் மொயதீன் அவர்கள் நாத்திகத்தை சார்ந்த தற்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களிடம் இஸ்லாத்தை போதித்த லட்சனத்தை மறந்து விட்டார்களா?

சென்ற ஆறு வருடம் முன்பு கருணாநிதி தலைமைல் நடைபெற்ற IUML பொது குழவில் நமது அமீரே மில்லத்? (காதர் மொய்தீன்) அவர்கள் ‘அல்லாஹும்ம நூர்ஹுச்சமவாதி வல் அரச’ என்ற திருக்குர்ஆனின் வசனத்திற்கு கடந்த 40 ஆண்டுகளாக திருக்குர்ஆனை நான் ஆராய்ச்சி செய்கிறேன். அனால் அதற்கான விளக்கத்தை என்னால் தமிழில் தர இயல வில்லை.

நான் மட்டுமல்ல. பெரிய பெரிய மௌலானாக்களாலும் அதற்கான விளக்கத்தை தர முடிய வில்லை. அனால் மொளானாவுக்கெல்லாம் மொளானாவாகிய நடமாடும் அவுலியா கலைஞர் அவர்கள் தன்னுடைய முரசொலி பத்திரிகையில் தெள்ளத் தெளிவாக இதற்கான விளக்கத்தை தந்துள்ளார்.

எனவே இவரை நான் என்னடைய ஆன்மீக தலைவராக ஏற்றுக் கொள்கிறேன் எனக் கூறி, ஓரிறைக் கொள்கை மார்க்கத்தில் இருக்குப்பவர் இவர் கடவுள் மறுப்பாளரை தனது ஆன்மீக அதாவது இஸ்லாமிய குறுவாக ஏற்றுக் கொண்டுள்ளாராம்.

இம்மாதிரியான நிறம் மாறும் சிம்மாசன ஆசை கொண்ட தலைவர்கள் தான் ஆன்மீகத்தை 40, 50 ஆண்டுகளாக மாற்று மதத்தவருக்கு உணர்த்துகிறார்கள? அல்லது இவர்களிடம் சென்று இணைவைப்பு கொள்கையின்படி இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் கொசைப்படுத்துகிரார்களா?

ஆசி வாங்கும் காதர் மொய்தீன்




சக்தி அம்மா காதர் மொய்தீனுக்கு ஆசி வழங்குகிறார். சன்மார்க்க மேதை? காலில் விழுந்து ஆசி பெற்றார். சத்தியத்தை போதிக்கச் சென்றவர் யார்? அசத்தியத்தை கைகூப்பி வணங்கியவர் யார்?.

இதில் இஸ்லாமிய போதனைகள் எங்கே இருக்கின்றது.தேடித் தாருங்கள்.

குனியும் போது எடுக்கப்பட்டது நிமிரும் போது எடுக்கப்பட்டது படுக்கும் போது எடுக்கப்பட்டது ஆசி வாங்க வில்லை ஊசி வாங்கவில்லை என்று கூறி இதை முட்டுக்கட்டுபவர்கள் இந்த செய்தியை வெளியிட்ட தினமலர் பத்திரிக்கையின் மீது வளக்கு தொடர்ந்தார்களா அல்லது மறுப்பாவது வெளியிட வைத்தார்களா? இதுவரை இல்லை! முதலில் அதைச் செய்யட்டும்!

இஸ்லாத்தை கொள்கையை குழி தொண்டி புதைக்கும் காதர் மொய்தீன்



வேலூரில் ஹிந்து முன்னணியினர் வந்தே மாதரம் பாடலை அனைவரும் கட்டாயமாக பாட வேண்டும் என்பதை வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் .

வேலூர் காதர் மொகிதீன் அழையா விருந்தாளியாக அந்த பாசிச பயங்கர வாதிகள் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு மைக் பிடித்து ‘சில தீய சக்திகள் வந்தே பாடலை எதிர்கின்றனர். அனால் முஸ்லிம்கள் அனைவரும் இதனை பாட வேண்டும்’ எனக்கூறிஹிந்துக்களுக்கு அவர்களின் ஆன்மிகத்தை சரியாக உணர்த்தி உள்ளார்.

இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒருமனதாக ஏகத்துவ கொள்கைக்கு வேட்டு வைக்கும் இந்த வந்தே மாதரம் பாடலை எதிர்க்கும்போது கல்லையும் மண்ணையும் வணங்க வேண்டும் என்ற ஹிந்துக்களின் ஆன்மீகத்தை இவர் உணர்த்தினாரே தவிர இஸ்லாமிய மார்க்கத்தை அல்ல!

இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையினையும் இந்திய முஸ்லிம்களின் வந்தே மாதிர பாடலின் எதிர்ப்பினையும் கொச்சைபடுத்தினார்.


மாலையும் மொய்தீனும்



மாலை போட்ட மாமேதை இங்கே சத்திய இஸ்லாத்தை எந்த விதத்தில் போதிக்கிறார்? அனைவருக்கும் ஒரு மாலை தனக்கு மட்டும் இரண்டு மாலைகள். இதில் இஸ்லாமிய பிரச்சாரம் எங்கே? தேடித்தாருங்கள்.

காயிதே மி்ல்லத் கல்லரையும் காதர் மொய்தீனும்




மறைந்த காயிதே மில்லத் கல்லரையில் 114 – வது பிறந்த நாள் கொண்டாடும் இஸ்லாம் காட்டித்தராத பகுத்தறிவற்ற இச்செயல் அரங்கேற்றம் ஆகும் இடத்திற்கு காதர் மொய்தீன் சென்றது ஏன்?

ஊரெல்லாம் இஸ்லாத்தை சொல்வதற்கு செல்லும் இந்த மேதை(?), உயர்த்தப்பட்ட கப்ருகளை தரைமட்டமாக்காமல் விடக்கூடாது மேலும் அதில் கட்டுவதோ பூசுவதோ கூடாது என்ற நபிகளாரின் போதனைக்கு செயல்வடிவம் கொடுக்காதது ஏன்?

இவை அனைத்தும் உணர்த்துவது என்னவென்றால்…காதர் மொய்தீன் அவர்கள் அரசியல் பதிவிகளுக்காக இஸ்லாமிய கொள்கைகளை குழி தொண்டி புதைக்கும் செயலையும் செய்யத் தயங்கமாட்டார் என்பதே நிதர்சன உண்மையாகிறது.

சாமியார்களை சந்திப்பது தவறா? அதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் உள்ளதா?

என்று கேட்கும் இவர்களுக்கு நாம் கூறிக்கொள்வது என்னவென்றால், சாமியார்கள் மற்றும் பாதிரியார்கள் அரசியல் தலைவர்களை சந்தித்து உண்மை இஸ்லாத்தை எடுத்துச்சொல்வதில் தவறில்லை.

இஸ்லாத்தை பொதிக்கின்றேன் என்ற பெயரில் பதவி ஆசைக்கும் விளம்பர மோகத்திற்கும் அடிமையாகி சாமியார்களிடம் ஆசி வாங்குவது அவர்களின், டிவிடியை வெளியிடுவது, அவர்களது கூட்டங்களில் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை தகர்ந்தெரியும் அளவில் பேசுவது மிகப்பெரும் இது போன்ற காரியங்கள் மிகப்பெரும் தவறாகும்.

இறைவன் திருமறையில்…

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர் களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும் (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். அல்குர்ஆன் 4-140

இது போன்று பல தவறான காரியங்களை செய்துவிட்டு மக்களிடம் பெரிய விமர்சனமாக வெடித்துக் கிளம்பும் போது சாமியாரிடம் சென்று ஆசி வாங்கவில்லை . பாசி வாங்கவில்லை என்று சப்பை கட்டுவோர் காதர் மொய்தீனின் செயலால் எழுந்துள்ள கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸிலிருந்து பதில் கூறட்டும்.

அசத்தியத்தை டிவிடி யாக பல் இழித்து வெளியிட்டதற்கு ஆதாரம்? ஜட்டி போட்ட சாமியாருக்கு அருகில் நின்றதற்கு ஆதாரம்? சக்தி அம்மாவிடம் ஆசி வாங்கியதற்கு ஆதாரம்? சபையில் இரண்டும் மாலைகளுடன் அமர்ந்திருப்பதற்கு ஆதாரம்? கல்லறைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடியதற்கு ஆதாரம்? வந்தே மாதரத்தை ஆமோதித்து ஹிந்துத்துவாவினரை ஊக்குவித்ததற்கு ஆதாரம்? வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்களை பாடச் சொன்னதற்கு ஆதாரம்?

இன்னும் புகைப்படங்களில் மறைந்திருக்கும் பல்வேறு கேள்விகளுக்கும் அவர்களிடம் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில் உண்டா?

-அபு அஹ்சன்


Read More...

சென்னை ஏழுகிணறில் நடைபெற்ற இரத்த தான முகாம்!




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏழுகிணறு கிளை மற்றும் ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேரு மருத்துவமணை இனைந்து கடந்த 26-7-2009 அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடத்தியது. இம்முகாமிற்கு மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் மற்றும் வட சென்னை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சுமார் 100 நபர்கள் இம்முகாமில் இரத்த தானம் செய்தனர்.
Read More...

சென்னை ஏழு கிணறு கிளையில் நடைபெற்ற இரத்த தான முகாம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் ஏழு கிணறு கிளை கடந்த 22-12-2009 அன்று இரத்த தான நடத்தியது. இம்முகாமை எழுப்பூர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடத்தியது. 76 நபர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இம்முகாமில மாநிலப் பொருளாளர் சாதிக் அவர்கள் கலந்து கொண்டார்.
Read More...

தனிப்பள்ளி கட்ட மார்க்கத்தில் ஆதாரம் உண்டா?

தனியாக பள்ளி கட்டுவது தவறு என்ற கருத்தில் முதுகெலும்பில்லாத சென்னை மண்ணடியில் வசிக்கும் பொய்யர்களால் நடத்தப்படும் அதிரை எக்ஸ்பிரஸ் என்ற இணைய தளத்தில், துபாயில் வசிப்பதாக சொல்லும் அபூஅஸீலா என்ற மார்க்க மற்றும் உலக அறிவு இல்லாத ஒருவரின் கட்டு உரையை வெளியிட்டிருந்தார்கள்.

அல்லாஹ் குர்ஆனில் சொன்ன அடிப்படையில் தான் நாம் (ததஜ) தனிப்பள்ளி கட்டுகிறோம் என்பதை விளக்கும் வண்ணம் இந்த கட்டுரை பதியப்படுகிறது. இது ஏகத்துவம் மாத இதழில் வெளியான கட்டுரை.

அபூஅஸீலா என்ற அறிவிலியும், அதிரை எக்ஸ்பிரசை நடத்தும், தஸ், மாஹி, பரக கூட்டணியும் பதில் சொல்ல கடமைபட்டுள்ளார்கள்.


தனியோனைத் துதித்திட தனிப்பள்ளி அவசியமே!

தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் ஆரம்பித்த நாள் முதல் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம் ஏராளம்! தாயத்து தகடுகள், தர்ஹா வழிபாடுகள், மௌலிது குப்பைகள் போன்ற இணை கற்பிக்கும் காரியங்களை எதிர்த்ததற்காகவும் மத்ஹபுப் பிரிவினைகளைக் கண்டித்ததற்காகவும் ஏகத்துவ வாதிகள் ஊர் நீக்கம் செய்யப்பட்டனர். ஏன்? தொழுகைக்குக் கூட பள்ளி வாசல்களில் தடை செய்யப்பட்டனர்.

நான்கு மத்ஹபுகளுக்கு மாற்றமாக தலையில் தொப்பி போடாமல், நெஞ்சில் கைகட்டி, விரலசைத்துத் தொழுபவர்கள் இப்பள்ளியில் தொழக் கூடாது; இரண்டாவது ஜமாஅத் நடத்தக் கூடாது என்றெல்லாம் ஜமாஅத்துல் உலமாவின் தூண்டுதலின் பேரில் ஊருக்கு ஊர் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் போர்டுகள் மாட்டப்பட்டன.

நபிவழியின் பிரகாரம் விரலசைத்துத் தொழுதவர்களின் விரல்கள் நறுக்கப்பட்டன. கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

ஆனால் அதே சமயம், மது அருந்துபவர்கள், வரதட்சணை வாங்கும் கயவர்கள், வட்டி மூசாக்கள், நாத்திகவாதிகள், அரசியல் புரோக்கர்கள் ஆகிய அனைவருக்கும் பள்ளியில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. எங்களது அடிப்படை திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் ஆகிய இரண்டு மட்டுமே என்றுரைத்ததற்காக மட்டுமே தவ்ஹீத்வாதிகள் பள்ளிகளை விட்டும் விரட்டப்பட்டனர்.

இவர்கள் நம்மைப் பள்ளிகளை விட்டும் விரட்டுவதென்ன? இது போன்ற பள்ளிகளில் உண்மையான முஃமின்கள் ஒரு போதும் நிற்கக் கூடாது என்பது தான் ஏக நாயனின் கட்டளை! இதோ இறைவனின் கட்டளையைப் பாருங்கள்.

தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை என்று சத்தியம் செய்கின்றனர். அவர்கள் பொய்யர்களே என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். (முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்!
அல்குர்ஆன் 9:107, 108

மேற்கண்ட வசனத்தில் நபியவர்களுடைய காலத்தில் ஏகத்துவவாதிகளுக்கெதிராக முனாஃபிக்கீன்கள் கட்டிய ஒரு பள்ளிவாசலைப் பற்றித் தான் அல்லாஹ் பேசுகிறான். முனாஃபிக்கீன்கள் கட்டிய பள்ளியைப் பற்றி அல்லாஹ் நான்கு காரணங்களைக் கூறுகிறான்.

1. முஃமின்களுக்குத் தீங்கு இழைத்தல்
2. ஏக இறைவனை மறுத்தல்
3. முஃமின்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துதல்
4. அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போர் புரிவோருக்குப் புகலிடம்

இந்த நான்கு காரணங்களும் அந்த முனாஃபிக்கீன்கள் கட்டிய பள்ளியில் இருந்த காரணத்தினால் தான் அல்லாஹ் அந்தக் கட்டடத்தில் நபியவர்கள் தொழுகைக்காகச் செல்வதைத் தடுத்தான்.

இந்த நான்கு காரணங்களும் எந்தெந்தப் பள்ளிகளில் காணப்படுகின்றதோ அவற்றைக் கட்டியவர்கள் அதனைப் பள்ளிவாசல் என்று சொல்லிக் கொண்டாலும் அவை இறைவனின் பார்வையில் இறையாலயமாகாது. இப்படிப்பட்ட பள்ளிகளில் உண்மையான முஸ்லிம்கள் சென்று தொழுவதும் தகாது.

இன்று நம் தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் இந்த நான்கு காரணங்களும் இருக்கின்றதா என்று பார்ப்போம்.

1. முஃமின்களுக்குத் தீங்கிழைத்தல்:

நபிகள் நாயகம் காலத்தில் பள்ளிவாசல் என்பது மக்களின் துயர் துடைக்கும் மையமாக விளங்கியது. பசியால் வாடுபவர்களும், படுப்பதற்கு இடமில்லாதவர்களும், பிணியால் அவதிப்படுவோரும், துயரங்களுக்கு உள்ளானவர்களும் நாடி வரும் இடமாகப் பள்ளிவாசல் தான் இருந்தது. ஆனால் இன்றோ வயிற்றுச் சோறுக்கு வழியில்லாதவன் கூட பள்ளிக்கு வரி கட்டவில்லையென்றால் அவனுக்கு அடக்கம் செய்ய இடம் கிடையாது என்று அலைக்கழிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.

யாருக்கும் எவ்வித இடையூறும் செய்யாமல் நபிவழியின் பிரகாரம் விரலசைத்து, நெஞ்சில் கைகட்டி தொழுபவர்கள் தாக்கப்படுகின்றனர். பெண்களுக்குப் பள்ளிவாசல்களில் அனுமதி மறுக்கப்படுகிறது. மஃரிப் உடைய முன் சுன்னத் போன்ற தொழுகைகள் தொழுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. நபி வழியின் பிரகாரம் சப்தமிட்டு ஆமீன் கூறுபவர்கள் தாக்கப்படுகின்றனர். பள்ளியில் குர்ஆன் மொழிபெயர்ப்புகள் படிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

தன்னைப் பெற்ற தந்தைக்கு மகன் ஜனாஸா தொழுவிப்பதற்குப் பள்ளிவாசல் நிர்வாகிகள் கதவடைக்கின்றனர். சத்தியக் கருத்துகளை உள்ளது உள்ளபடி பள்ளியில் எடுத்துரைக்கப்படுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. நபிவழியின் பிரகாரம் வரதட்சணை வாங்காமல் அனாச்சாரங்களை ஒழித்து செய்யப்படும் திருமணங்களுக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்படுகிறது. பதிவுப் புத்தகம் தர மாட்டோம் என்று மிரட்டப்படுகின்றனர்.

வரதட்சணை வாங்கினாலும் பள்ளிக்குப் பங்கு தரவேண்டும் என்று ஜமாஅத்துகள் விதி வகுத்துள்ளன. வரதட்சணைத் திருமணங்கள் பள்ளிவாசல் இமாம், முத்தவல்லி மற்றும் நிர்வாகிகள் முன்பாகவே பள்ளிவாசல்களில் நடைபெறுகின்றன.

பள்ளிவாசல்களுக்குக் கோடிக் கணக்கில் சொத்துக்கள் இருந்தும் மக்களிடம் பணம் கறப்பதில் தான் பள்ளிகள் போட்டியிடுகின்றனவே தவிர யாருக்கும் எந்த உதவியும் இன்றைய பல பள்ளிகளில் காண முடிவதில்லை. இவ்வாறு பல விஷயங்களில் பள்ளிவாசல்கள் மக்களுக்குத் தீங்கிழைக்கும் இடமாகத் தான் உள்ளனவே தவிர நபிகள் நாயகம் காலத்தில் இருந்த ஒரு நிலையை சில பள்ளிகளில் தவிர மற்றவற்றில் காண முடிவதில்லை.

2. இறை நிராகரிப்பு:

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

அல்குர்ஆன் 72:18

மேற்கண்ட வசனத்திற்கு நேர் எதிராகப் பல பள்ளிவாசல்கள் இணைவைப்புக் காரியங்களின் கோட்டைகளாகத் திகழ்கின்றன. பள்ளிவாசல்களுக்குப் பெயர் வைக்கும் போதே நாகூராண்டவர் பள்ளிவாசல், முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் என்று இறைவனல்லாத ஆண்டவர்களுக்காகத் தான் பள்ளிவாசல்களே கட்டப்படுகின்றன. முஹைதீன் ஆண்டவர் எங்கும் வருவார் என்ற குஃப்ரான நம்பிக்கையில் தான் பல பள்ளிகளுக்கு இவருடைய பெயரைச் சூட்டுகின்றனர்.

இறைவனுடைய அடிமைகளை எல்லாம் இறைவனாகப் பாவித்து ஓதப்படுகின்ற கேடுகெட்ட மௌலிது குப்பைகள் பள்ளிவாசல்களில் தான் அரங்கேற்றப்படுகின்றன. முஹைதீன் ஆண்டவரை ஆயிரம் முறை அழைத்தால் விரைந்து வருவார்; அழைப்பிற்குப் பதில் தருவார் என்ற நரகத்து வரிகளை உள்ளடக்கிய யாகுத்பா, சுப்ஹான மௌலிது, நாகூர் ஆண்டவர் மௌலிது, ஸலாத்துன் னாரிய்யா போன்ற பல குப்பைகள் பள்ளிவாசல்களில் கொட்டப்படுகின்றன. பள்ளிவாசல்களுக்குள்ளேயே கப்ருகள் கட்டப்பட்டு வணக்க வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மேலும் பள்ளிவாசல்களோடு இணைந்ததாக பள்ளிவாசல் காம்பவுண்டிற்குள் அட்டாச்டு தர்ஹாக்களும் இணைந்துள்ளன. மேலும் தாயத்து தகடுகள், பில்லி, சூனியம், பால்கிதாப் பார்த்தல், போன்ற இன்னும் பல இணை கற்பிக்கும் காரியங்கள் அனைத்தும் பள்ளிகளில் தான் நடைபெறுகின்றன. இவ்வாறு பல பள்ளிகள் இறை நிராகரிப்பின் தளங்களாகத் தான் திகழ்கின்றன. இந்த இரண்டாவது காரணமும் பல பள்ளிகளில் நிதர்சனமாக, தெளிவாகவே காணப்படுகிறது.

3. முஃமின்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்குதல்:

பள்ளிவாசல்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் மையமாகும். ஆண்டியும், அரசனும், கருப்பனும், வெள்ளையனும் சமம் என்றுரைக்கும் இடம் தான் பள்ளிவாசல். ஆனால் இத்தகைய பள்ளிவாசல்கள் தான் முஃமின்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் இடங்களாக நமக்கு மத்தியில் காட்சியளிக்கின்றன. நான்கு மத்ஹபுகளின் ஒன்றைப் பின்பற்றாதவர்கள் எங்கள் பள்ளிக்குள் வரக் கூடாது என்று போர்டு மாட்டி வைத்திருப்பதே பிரிவினைக்கு முதல் சான்றாகும். சமுதாயத்தில் ஏற்படும் எப்பேற்பட்ட பிரச்சனைகளையும் கூட தீர்த்து விடலாம். ஆனால் இந்த ஷாஃபி, ஹனஃபி பிரச்சினை கியாமத் நாள் வரை தீராத பிரச்சினையைப் போன்றும், ஜாதிப் பிரிவினைகளைப் போன்று பிறக்கும் போது ஒட்டிக் கொண்டு பிறக்கின்ற ஒரு பிரிவினையாகி விட்டது. இன்றைக்கும் கூட பல ஊர்களில் ஷாஃபியாக்கள் மற்றும் ஹனஃபியாக்களுக்கு மத்தியிலான திருமண உறவுகள் மிக அரிதாகவே நடைபெறுகின்றன. பள்ளிவாசல்கள் உருவாக்கப்படும் போது இது ஷாஃபி பள்ளி இது ஹனஃபி பள்ளி என்று பிரிவினையின் அடிப்படையில் தான் உருவாக்கப்படுகின்றன.

நெல்லை மாவட்டம் தென்காசியில் ஒரே பள்ளியில் குறுக்காகச் சுவர் வைக்கப்பட்டு ஷாஃபிகள் ஒரு புறமும், ஹனஃபிகள் ஒரு புறமும் தொழுது வருகின்றனர். வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் போன்ற பெரும் மதரஸாக்களிலெல்லாம் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களைப் போன்று ஷாஃபி மாணவர்கள் ஒரு புறமும் ஹனஃபி மாணவர்கள் ஒரு புறமும் மிகவும் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.

கஃபாவில் கூட பல ஆண்டுகளாக நான்கு முஸல்லாக்கள் விரிக்கப்பட்டிருந்தன. தவ்ஹீதின் ஆட்சி வந்த பிறகு தான் அவையனைத்தும் ஒன்றாக்கப்பட்டன. அனைத்து ஆலிம்களும் ஷாஃபி ஹனஃபி பிரிவினை தான் சரி என்றே பள்ளிவாசல்களில் பிரச்சாரம் செய்கின்றனர்.

இமாம் ஷாஃபியின் தவறான கருத்துக்களுக்கு மாற்றமாக இமாம் அபூ ஹனீஃபாவின் மிகச் சிறந்த ஒரு மார்க்கத் தீர்ப்பை ஷாஃபியானவன் பின்பற்றினால் அவன் நரகவாதியா? இமாம் அபூ ஹனீஃபாவின் தவறான கருத்துக்களுக்கு மாற்றமாக இமாம் ஷாஃபி அவர்களின் மிகச் சிறந்த மார்க்க ரீதியிலான கருத்துக்களை ஹனஃபியானவன் பின்பற்றினால் அவன் நரக வாதியா?

இதற்கெல்லாம் இந்தப் பிரிவினை ஆலிம்கள் பதில் கூறத் தயாரில்லை. இப்படிப்பட்ட இந்த மத்ஹப் பிரிவினைகளின் உலைக்களங்களாகத் தான் இன்றைய பல பள்ளிகள் திகழ்கின்றன. இப்படிப்பட்ட பள்ளிகள் உண்மையான முஸ்லிம்கள் தொழுவதற்குத் தகுதியானதா? என்பதை உண்மை முஸ்லிம்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

4. அல்லாஹ்விற்கும் தூதருக்கும் எதிராகப் போர் புரிபவர்களுக்குப் புகலிடம்:

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.
அல்குர்ஆன் 9:17, 18

மேற்கண்ட வசனங்கள் இணைகற்பிப்பவர்கள் பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்வது கூடாது என்பதைத் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் பள்ளிவாசல் நிர்வாகிகள்:

1. அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பியவர்களாகவும்
2. தொழுகையை நிலை நாட்டுபவர்களாகவும்
3. ஸகாத்தை நிறைவேற்றுபவர்களாகவும்.
4. அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாதவராகவும் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஆனால் இன்றைய பள்ளிவாசல் நிர்வாகிகளின் நிலைகளை நாம் பார்க்கும் போது இதற்கு நேர்மாற்றமாகத் தான் உள்ளது. பள்ளிவாசல் நிர்வாகிகள் தான் தர்ஹா வழிபாடு, தாயத்து தகடுகள், மௌலிதுகள் போன்ற அனைத்து இணை கற்பிக்கும் காரியங்களுக்கும் குத்தகைதாரர்களாகத் திகழ்கின்றனர். இவையனைத்தையும் பள்ளி வாசல்களில் இவர்கள் தான் அரங்கேற்றுகின்றனர்.

மேலும் இறைவனுக்கும் அவன் தூதருக்கும் எதிராகப் போர்ப் பிரகடனம் செய்யக்கூடிய வட்டி மூசாக்கள், வரதட்சணையை ஆதரிக்கும் இமாம்கள், முத்தவல்லிகள், கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகவாதிகள், லாட்டரி வியாபாரிகள், கட்டப் பஞ்சாயத்துப் பேர்வழிகள், பள்ளிவாசலை சீட்டாட்டத்திற்கும், பொழுது போக்கிற்கும் பயன்படுத்தி விட்டுப் பாங்கு சொன்னவுடன் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வெளியேறக் கூடியவர்கள், அரசியல்வாதிகளுக்கு வால் பிடிக்கக்கூடிய அரசியல் புரோக்கர்கள், பெண்களைப் பலவந்தமாக அடையக் கூடிய காமவெறியர்கள், விபச்சாரம் செய்யக் கூடியவர்கள், மது அருந்தக் கூடியவர்கள் ஆகியோர் தான் இன்றைக்குப் பல பள்ளிவாசல் நிர்வாகிகளாகக் காட்சி தருகின்றனர். மேலே சுட்டிக்காட்டப்பட்ட காரணங்களிலும் அல்லது சொல்லப்படாத இன்னும் பல தீய காரணங்களிலும் ஒன்றோ இரண்டோ அல்லது இதற்கு அதிகமான விஷயங்களோ இன்றைய பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் காணப்படாமல் இல்லை. இவற்றை வெளிப்படையாகவே பலர் செய்து வருகின்றனர். இப்படி இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற, இறைவனுக்கெதிராக யுத்தம் செய்கின்றவர்களுக்குப் புகலிடமாகத் தான் பல பள்ளிகள் திகழ்கின்றன.

இது போன்ற பள்ளிகள் உண்மையான முஃமின்கள் நின்று வணங்குவதற்குத் தகுதியானவை கிடையாது என்பது தான் முதலில் நாம் சுட்டிக் காட்டிய வசனத்தில் இறைவனின் பிரகடனமாகும்.

1. முஃமின்களுக்கு தீங்கிழைத்தல்
2. ஏக இறைவனை மறுத்தல்
3. முஃமின்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துதல்
4. அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகப் போரிடுவோருக்குப் புகலிடம்.

இந்த நான்கு காரணங்களும் அந்த முனாஃபிக்கீன்கள் கட்டிய பள்ளியில் இருந்த காரணத்தினால் தான் அல்லாஹ் அந்தக் கட்டடத்தில் நபியவர்கள் தொழுகைக்காகச் செல்வதைத் தடுத்தான்.

நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை என்று சத்தியம் செய்கின்றனர். அவர்கள் பொய்யர்களே என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். (முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்!
அல்குர்ஆன் 9:108

முனாஃபிக்கீன்கள், நாங்கள் நல்லதற்காகத் தான் இப்பள்ளியைக் கட்டியுள்ளோம் என்று சத்தியம் செய்து கூறிய போதும் இந்த நான்கு காரணங்களும் இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் கூறியது பொய் என அல்லாஹ் சாட்சி கூறுகிறான். அது போன்று மேற்கண்ட நான்கு காரணங்களும் நடைபெறுகின்ற பள்ளிவாசல் நிர்வாகிகள் நாங்கள் நல்லதற்காகத் தான் இந்தப் பள்ளியை நிர்மாணித்துள்ளோம் என்று கூறிய போதிலும் இந்நான்கு காரணங்களும் நீக்கப்படுகின்ற வரை அவை முஃமின்கள் தொழுவதற்குத் தகுதியான பள்ளிகளாக ஆகாது என்பதே உண்மையாகும்.

முஃமின்கள் தொழுவதற்குத் தகுதியான பள்ளி எது?

ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.
அல்குர்ஆன் 9:108

இப்படிப்பட்ட பள்ளி வாசல்கள் வரிசையில் தவ்ஹீத் பள்ளிகள் தான் முன்னிலை வகிக்கின்றன. இன்றைக்குத் தவ்ஹீத் பள்ளிகள் ஏழை மக்கள் நாடிவரும் தலங்களாகவும் துயர் துடைக்கும் இடங்களாகவும் திகழ்கின்றன. தவ்ஹீத் பள்ளிகளின் பணிகளை பட்டியலிடத் துவங்கினால் இந்த இதழ் பற்றாது. மக்களுக்கு இடையூறு செய்தல் என்பது தவ்ஹீத் பள்ளிகளில் அறவே கிடையாது. முஃமின்களைப் பிரிக்கக்கூடிய மத்ஹபுப் பிரிவினைகளும் தவ்ஹீத் பள்ளிகளில் கிடையாது. அனைத்து மத்ஹபிலிருந்து நபிவழிக்கு வந்தவர்களும் இன்றைக்கு ஒரே முறையில் தவ்ஹீத் பள்ளிகளில் தொழுகையை நிறைவேற்றுகின்றனர். மேலும் மத்ஹபைப் பின்பற்றக்கூடியவர்களும் அவர்களது முறைப்படி தொப்பி அணிந்து விரலசைக்காமல் தவ்ஹீத் பள்ளிகளில் தொழுகையை நிலை நாட்டுகின்றனர். அவர்கள் தாக்கப்படுவது கிடையாது. பித்அத்தான காரியங்களைச் செய்வதற்குத் தான் தவ்ஹீத் பள்ளியில் தடை விதிக்கப்படுமே தவிர வேறு யாரும் தடுக்கப்படுவது கிடையாது. மேலும் நபி வழியின் அடிப்படையில் தொழுபவர்கள் மட்டுமே இங்கு வரவேண்டும் என்ற போர்டுகளும் தவ்ஹீத் பள்ளிகளில் கிடையாது. மேலும் ஏகத்துவத்தை எடுத்துரைத்து, இணை கற்பிக்கும் காரியங்களை அழிக்கக் கூடிய தளங்களாகத் தான் தவ்ஹீத் பள்ளிகள் திகழ்கின்றன.

இறைவன் கூறிய பண்புகளுக்குச் சொந்தக்காரர்கள் தான் தவ்ஹீத் பள்ளிவாசல் நிர்வாகிகளாகத் திகழ்கின்றனர். எனவே தான் இன்றைக்கு ஊருக்கு ஊர் தவ்ஹீத் ஜமாஅத் தனிப் பள்ளிகளை உருவாக்கி வருகின்றது. இவை அடித்தளமிடப்படும் போதே இறையச்சத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.

இதை இங்கு எழுதுவதற்குக் காரணம், அனைத்து இறையாலயங்களும் இதைப் போன்று மாற வேண்டும் என்பதற்காகத் தானே தவிர, மற்ற ஆலயங்களைத் தகர்க்க வேண்டும் என்பதற்கல்ல. இந்நிலை கனியும் தருணம் இறைவன் நாடினால் வெகு தூரத்திலல்ல. மிக அருகில் தான் காட்சியளிக்கிறது.

மேற்கண்ட நான்கு தீய நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொண்டு பள்ளிவாசல் நிர்வாகிகள் திருந்திக் கொண்டால் அப்போது தான் அவை பள்ளிவாசல்களாகக் கருதப்படும்.

இதனை வேறொரு விதமாகவும் அல்லாஹ் நமக்குத் தெளிவு படுத்துகிறான். இப்ராஹீம் நபியிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது என்று கூறும் இறைவன், அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் கூட்டத்தை விட்டு நாம் விலகி விட வேண்டும் என வழி காட்டுகிறான்.

உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.
அல்குர்ஆன் 60:4

இணை கற்பிப்பவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள பள்ளி வாசல்களைப் புறக்கணித்து, தக்வா எனும் இறையச்சத்தின் அடிப்படையில் பள்ளிகளை அமைப்பது உண்மை முஸ்லிம்களின் கடமையாகும். அது குடிசையாக இருந்தாலும் சரியே
Read More...
Related Posts Plugin for WordPress, Blogger...
 
Copyright (c) 2011 Designed byDezMatix
Other Links : TNTJ NEWS PORTAL, Online PJ,